tamilnadu

img

பாஜகவை கழற்றிவிட்டது அதிமுக

சென்னை, ஜன.31- தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி  மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடை பெறுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்த  பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்க  உள்ளதாக அறிவித்துவிட்டன. இந்தநிலை யில், அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு இடங்களை ஒதுக்கீடு செய்வது குறித்து அதிமுக-பாஜக இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.  பாஜகவிற்கு 10 சதவீத இடங்களை மட்டுமே ஒதுக்க அதிமுக திட்டமிட்டிருந்தது.

ஆனால் பாஜக 30 சதவீத இடங்களை கேட்டது . மேலும், அதிமுகவிற்கு வெற்றிவாய்ப்பு ள்ள இடங்களை அதிக அளவில் ஒதுக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியது. இதற்கு அதிமுக மறுப்பு தெரிவித்தது.  இந்த நிலையில் சென்னை கமலா லயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,‘தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். அதிமுகவின் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோர் நான் நேசிக்கக் கூடிய தலைவர்கள்.கடினமான சூழலிலும் அதிமுக வை ஓபிஎஸ் - ஈபிஎஸ் வழிநடத்தினார்கள். நகர்ப்புற தேர்தலில் தனித்துப் போட்டி என்றா லும் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது தொடரும்.தனித்து போட்டியிடுவது என்பது கடினமான முடிவு அல்ல. தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளோம். அதிமுக தலைவர்கள் மீது எந்த வருத்தமும் இல்லை.தமிழ்நாடு முழுவதும் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளோம்’என்றார்.