tamilnadu

img

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் நில அளவைத் துறை ஊழியர்கள் போராட்டம்

சென்னை, பிப். 23- நில அளவைத் துறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் உருவாக்கம் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலு வலர்கள் ஒன்றிப்பு சார்பில் சென்னை, திருச்சி, மதுரை,  கோவை ஆகிய 4 மண்டலங்களில்  வியாழனன்று (பிப். 23) உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக, சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் மாநில துணைத் தலைவர் கி.செந்தில்முருகன் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் அ.பேபி வரவேற்றார். தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கத் தின் மாநில துணைத் தலைவர் ஆர்.எஸ்.ராஜகோபால் துவக்கி வைத்தார்.  ஒன்றிப்பின் பொதுச் செயலா ளர் அண்ணா குபேரன் கோரிக்கை களை விளக்கிப் பேசினார்.திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தென்காசி. நெல்லை, நாகை, மயிலாடுதுறை, விழுப்பு ரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட  மாவட்டங்களில் கூடுதல் நில அளவை களப்பணியாளர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். துணை ஆய்வாளர், ஆய்வாளர் கள் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். அனைத்து வட்டங்களுக்கும் ஒரு டிஜிபிஎஸ்  கருவி வழங்க வேண்டும். களப்பணி அலுவலர்களுக்கு சனி,  ஞாயிறு அரசு விடுமுறையை உறுதி செய்ய வேண்டும் உள் ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

வேளாண்மை துறை அமைச் சுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் உ.சுமதி, வணி கவரி பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சா.டானியல் ஜெயசிங், தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வெ.விஜயகுமரன், ஒன்றிப்பின் முன்னாள் மாநிலச் செயலாளர் வே.கணபதி, அரசு நில அளவைப்  பதிவேடுகள் துறை புல உதவியா ளர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கு.பாண்டியன், அரசு ஊழியர் சங்க சென்னை மாவட்டச் செயலாளர்கள் ம.அந் தோணிசாமி, சி.கலைச்செல்வி, எஸ்.ராமு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பாரி போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். இதுகுறித்து அமைப்பின் பொதுச் செயலாளர் அண்ணா குபேரன் கூறுகையில், நில அள வைத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை அரசு திட்ட மிட்டு நிரப்பாமல் உள்ளது. காலப் போக்கில் இந்த துறையையும் அம்பானியிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடு பட்டு வருகிறது. இந்தத் துறை தனியார் மயமானால் சாதாரண ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களது நிலத்தை அள வீடு செய்ய தனியார் நிறுவனம் நிர்ணயிக்கும் தொகையை வழங்க வேண்டிய சூழல் ஏற்படும்.  மேலும் இட ஒதுக்கீடு கேள்விக் குறியாகும் எனவே தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றார்.  அதேபோல் அவுட்சோர்சிங் முறையையும், ஒப்பந்த அடிப் படையில் ஊழியர்களை நியமனம் செய்வதையும் கைவிட வேண்டும்.  நில அளவை சார்ந்த அனைத்து பணிகளையும் கருத்தில் கொள் ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல்  பணியை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தும் போக்கை அதிகா ரிகள் கைவிட வேண்டும் ஊழி யர்கள் கோரிக்கை தொடர்பாக அரசு  சங்க நிர்வாகிகளை அழைத் துப்பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்  கொண்டார்.