tamilnadu

img

சோக்காடியில் ஆதிதிராவிடர் நல ஆணைய இயக்குநர் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தில் பட்டியலின மக்களின் வீடுகள் மீது, சாதி ஆதிக்க சக்திகள் நடத்திய தாக்குதல் குறித்து மாநில ஆதிதிராவிடர் நல ஆணைய இயக்குநர் எஸ்.ரவிவர்மன் சனிக்கிழமையன்று பட்டியலின மக்களிடம் நேரில் விசாரணை நடத்தினார். தாக்குதலுக்குள்ளான வீடுகளையும் பார்வையிட்டார். அவரிடம், தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய எஸ்.ஜி,ராஜன், சதாசிவம், ஊராட்சிமன்றத் தலைவர் கொடிலா, அவரது கணவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஊராட்சித் தலைவர் கொடிலாவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர்கள் எக்ஸ்.இருதயராஜ், வி.கோவிந்தசாமி, வட்டச் செயலாளர் டி.ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் லெனின் முருகன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.