விருதுநகர், ஜன.1- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை அடுத்துள்ள களத்தூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயி ரிழந்தனர். எட்டு பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம், வடுகபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது களத்தூர். இங்கு ஆர்.கே.வி.எம் என்ற தனியா ருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சின்னகுருசாமி மகன் வழிவிடுமுருகன்(42) இந்த ஆலையின் உரிமதாரராக உள்ளார். சென்னையில் உள்ள மத்திய பெட்ரோ லியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் பத்துக்கும் மேற்பட்ட அறை களில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. சனிக்கிழமை காலை வழக்கம்போல் இந்த ஆலையில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. தொழிலாளர்கள் மருந்துக் கலவை செய்தபோது எதிர்பாராத விதமான உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மருந்துக் கலவை அறை மற்றும் அருகில் இருந்த மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமாயின. ஏழு அறை களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பி.பாறைபட்டியைச் சேர்ந்த செல்வம் (எ) வீரக்குமார் (45), மேட்டுப்பட்டி யைச் சேர்ந்த எஸ்.குமார் (38), சேர்வைகாரன் பட்டியைச் சேர்ந்த பி.பெரியசாமி (65), ஆகி யோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன. பலத்த காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பி.பாறைப் பட்டியைச் சேர்ந்த முருகேசன் (38) உயிரி ழந்தார். இந்த விபத்தில் மங்களம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி(35) ,சாணார்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(எ) முத்து ( 35), அவரது மகன் மனோஅரவிந்த் (8), பி.பாறைப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன்(38), காளியப்பன்(60), கனகரத்தினம் (36), முனிய சாமி (28) மற்றும் உயிரிழந்த சேர்வைக்கா ரன்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி மகன் அழ கர்சாமி (28) ஆகியோர் படுகாயமடைந்தனர். புத்தாண்டை கொண்டாடுவதற்கும் அதையொட்டி பூஜை நடத்துவதற்காகவும் தொழிலாளர்கள் வந்ததாகக் கூறும் காவல் துறையினர், அப்போது தொழிலாளர்கள் ரசாய னத்தை கலக்க ஆரம்பித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து நடந்துள்ளது. புத்தாண்டு என்பதால் விபத்தில் படுகாயம டைந்த கோபாலகிருஷ்ணன் தனது மகன் மனோ அரவிந்தனையும் அழைத்து வந்துள்ளார். காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி னர்.
சிஐடியு ஆறுதல்
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும் பங்களை சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, சிஐடியு பட்டாசு தீப்பெட்டி தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.மகா லட்சுமி, மாவட்டத் தலைவர் கே.முருகன், நகர் தலைவர் வி.என்.ஜோதிமணி, பொருளாளர் ஜெபஜோதி, ரெங்கநாதன், ஆனந்தபாபு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.