சென்னை,பிப்.15- “என்றைக்குமே தமிழகத்தில் பாஜக நுழைய முடியாது என்ற ராகுல் காந்தியின் கூற்று உறுதிப்படு கிற வகையில் தமிழக பாஜக செயல்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- சமீபத்தில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கண்டு பிடிக்கப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதற்குப் பிறகும் இதில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாக அண்ணாமலையும், மற்றவர்களும் கற்பனைகளை நாள்தோறும் அவிழ்த்து விடுகிறார்கள். இதை வைத்துக் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில் அரசியல் ஆதாயம் தேடலாம் என பாஜக கனவு காண்கிறது. தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் மதுரை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் சிபிஐ விசார ணைக்கு உத்தரவிட்ட பிறகும், தமிழக முதல்வர் வீட்டை முற்றுகையிட பாஜக-வின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தியிருக் கிறார்கள்.
எந்த பிரச்சினையிலும் தமிழக மக்களின் கவ னத்தை ஈர்ப்பத்தில் படுதோல்வி அடைந்து வருகிற தமிழக பாஜக, முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்றது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலாகும். உச்சநீதிமன்றத்தில் உரிய ஆணை வழங்கிய பிறகும் முதல்வரிடம் நீதி கேட்டு போராடு வது எந்த வகையிலும் ஏற்கக் கூடியது அல்ல. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக மக்களின் நலனிற்கு விரோதமாக செய ல்படுகிற அண்ணாமலை, எந்தப் பிரச்சினையை கையில் எடுத்தாலும் எந்தவித பலனும் கிடைக்கா மல் அவருக்கு எதிராகவே போய்க் கொண்டிருக் கிறது. இந்நிலையில், தமிழகத்தில் எதிர்காலமே இல்லாத ஒரு கட்சியாக பாஜக விளங்கி வரு கிறது. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.