tamilnadu

img

பெல் நிறுவனத்தின் 450 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்

திருச்சிராப்பள்ளி, செப்.28 - திருச்சி பெல் சிஐடியு சங்கம் சார்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரம சிவம் திருச்சி மாவட்ட ஆட்சி யர் பிரதீப்குமாரிடம் கொடுத்த மனுவில் கூறி யிருந்ததாவது: பொதுத் துறை நிறுவன மான பெல் நிறுவனம் கடந்த 1965 ஆம் ஆண்டு முதல் உற் பத்தியை தொடங்கி, இன்று  வரை நாட்டின் 70 சதவீத மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. அதுமட்டு மல்லாமல் Engineering Enterprises நிறுவனங்க ளில் உலகளாவிய அள வில் முதன்மையான இடத் தில் உள்ளது.  சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையில் இருந்து மீண்டு தற்பொழுது ரூ.1,40,000 கோடி அளவிற்கு பெற்றுள்ளது. மேலும் பல ஆர்டர்கள் வர  அதிக வாய்ப்புகள் உள்ளன.  ஆகையால் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் புதிய  பணி நியமனங்களும், நிறு வன விரிவாக்கப் பணிகளும்  மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி யூனிட்டில் 5  MW&7.5 MW சூரிய மின்  உற்பத்தி செய்து தமிழகத் திற்கு வழங்கி வருகிறோம். பசுமை மின் உற்பத்தியை மேலும் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித் தும் திட்டமிடல்கள் உள்ளன என்பதையும் தங்களின் மேலான சுவனத்திற்கு கொண்டு வருகிறோம். எனவே பெல் விரிவாக்கத் திற்கான தேவையை கருத் திற்கொண்டு, பெல் நிறுவ னத்தின் 450 ஏக்கர் நிலத்தை  கையகப்படுத்தும் பணி களை கைவிட வேண்டுமென பி.எச்.இ.டபுள்யூ.யூ- சிஐடியு  சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு அவர் மனு வில் கூறியிருந்தார்.