tamilnadu

img

திமுகவுக்கு ஆதித்தமிழர் கட்சி ஆதரவு...

மதுரை:
ஆதித்தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்மதுரையில் ஞாயிறன்று நடைபெற்றது. நிறுவனத்தலைவர் கு.ஜக்கையன் தலைமைவகித்தார். பொதுச்செயலாளர் இளங்கோவன், நிதிச்செயலாளர் விடுதலை வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக அரசும், மாநிலத்தில் அதிமுக அரசும் மக்கள் விரோத சட்டங்களை நடைமுறைப்படுத்தி நீட் தேர்வு, இந்திய குடியுரிமை திருத்தச்சட்டம், மாட்டு இறைச்சிக்குதடை, கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்கள், படுகொலைகள், சமூகநீதிக்கு முரணான 10 சதவீத உயர்சாதியினருக்கான இடஒதுக்கீடு, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, சில்லரை வர்த்தகத்தில் தனியார் மயம், மத்திய பணியிடங்களில் தமிழருக்கான வாய்ப்புகள் மறுப்பு, கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற ஏழை -எளிய மக்களை அச்சுறுத்தும்சர்வாதிகார கொடூர அடக்குமுறைகளை நடத்தி விட்டு, மக்களை சந்திக்கிற சந்தர்ப்பவாத அதிமுக - பாஜக கூட்டணியை அகற்ற வேண்டும். சமூகநீதி, சமத்துவம், ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் திமுக கூட்டணியை, இத்தேர்தலில் ஆதரிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அமைப்புச்செயலாளர் திலீபன்,தலைமை நிலையச்செயலாளர் விஸ்வகுமார், மகளிரணிசெயலாளர் அய்யம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;