tamilnadu

சேற்றில் சிக்கி வாலிபர் பலி

கடலூர், பிப்.20- கடலூர் அருகே மருதாடு சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 33). கூலித்தொழிலாளி. இவர் சனிக்கிழமை தோட்டப்பட்டு பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக இறங்கியுள்ளார். பின்னர் வெகுநேரமாகியும் மேலே வரவில்லை. இதனால் உடனிருந்தவர்கள் ஏரியில் இறங்கி தேடி பார்த்த போது அய்யப்பன் சேற்றில் சிக்கியது தெரிந்தது. உடனே அய்யப்பனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அய்யப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.