tamilnadu

img

பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சென்னை, அக். 12- மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சி க்கும் பிரிவினைவாதிகளை - மதவெறியர் களைத் தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி தமிழக அரசியலில் முத்திரை பதித்த இயக்கமாக நடைபெற்றது.  அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளன்று, தமிழ கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்து வதற்கு அனுமதி கேட்டிருந்தது. தமிழக அரசு மறுத்த நிலையில் உயர்நீதிமன்றம் அதற்கு அனு மதி வழங்கியது. காந்தியை படுகொலை செய்த  ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு காந்தியின் பிறந்த நாளன்று பேரணி நடத்த அனுமதி வழங்கி யது அண்ணல் காந்தியின் மகத்தான தியாகத்தையும் ஒட்டுமொத்த தேசபக்தர்களின் சுதந்திர போராட்ட தியாகத்தையும் இழிவு படுத்துவதாகும் என்று தமிழகத்தின் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் குமுறி எழுந்தன.

ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனு மதி வழங்கக்கூடாது என வலியுறுத்தின. எனினும்  உச்சநீதிமன்றத்தின் அனுமதி கிடைத்ததால் ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் ஊக்கம் அடைந்து வெறிக்கூச்சல்களை கிளப்பத் துவங்கினர். இந்த நிலையில் இடதுசாரி கட்சிகள், விடுதலை  சிறுத்தைகள் கட்சி ஒன்றுகூடி, அதே அக்டோ பர் 2 காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழு வதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கம் நடத்துவோம் என அறிவித்தன.  தமிழக அரசியலில் மதவெறியர்கள் ஒரு பக்கமும் மக்கள் நலன்காக்கும் மதச்சார்பற்ற சக்திகள் ஒரு பக்கமுமாக பகிரங்கமாக களத்திற்கு வந்த நிலையில், அதேநாளில் இரு தரப்புக்கும் அனுமதி வழங்குவது இல்லை என்ற நிலைப்பாட்டை அரசு நிர்வாகம் மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அக்டோபர் 11 அன்று அனுமதி அளித்தது. 

இந்நிலையில், இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் இணைந்து 9 கட்சிகள் சார்பில் மனித சங்கிலி யில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு 17 கட்சிகள் உள்ளிட்டு 75 அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் மனிதச் சங்கிலி இயக்கம் செவ்வாயன்று (அக். 11) மாலை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த இயக்கத்தில் குழந்தைகளுடன் தாய்மார்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், வாலிபர்கள், மாணவர்கள், சிறுபான்மை மக்கள், முதியவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள் என லட்சக்கணக் கானோர் தன்னெழுச்சியாக பங்கேற்று “மத வெறி சக்திகளை மாய்ப்போம், அரசியல் சாச னத்தை பாதுகாப்போம், தேசத்தை பாது காப்போம்” என்ற முழக்கத்தோடு மதவெறி சக்திகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

கவனம் ஈர்த்த மாற்றுத்திறனாளிகள்

கடும் பொருளாதார நெருக்கடியிலும், உடல்  உபாதைகளாலும் வாழ்க்கையை நகர்த்தும் மாற்றுத்திறனாளிகள் தங்களது, உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் மாநிலம் முழு வதும் ஆயிரக்கணக்கானோர் இந்த இயக்க த்தில் கலந்து கொண்டு, கவனம் ஈர்த்தனர். சென்னையில் உள்ள அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே தொடங்கி  ஆயிரம் விளக்கு மசூதி வரை சுமார் 2 கிலோ  மீட்டர் தூரம் நடைபெற்ற மனிதச் சங்கிலி இயக்கத்தை துவக்கிவைத்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர்.

“இந்த இயக்கத்திற்கு அழைப்பு விடுத்த உடனே பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இதில் பங்கேற்றுள்ளனர். இது பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு விடும் எச்சரிக்கையாகும். 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதிதான் இந்த மனிதச் சங்கிலி இயக்கம்”.

     சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

“தமிழகம் மதவாதத்துக்கு எதிரான மண். தமிழ் மண்ணை காவி மயமாக்க முயலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சின் நடவடிக்கையை தமிழக மக்கள் ஒன்றுபட்டு முறியடிப்பார்கள்”

     திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

“சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் சக்திகளுக்கு இங்கு இடமில்லை என்பதை மனித சங்கிலி நிரூபித்துக் காட்டியுள்ளது”

         மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ 

“தமிழகத்தில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த அரசு அனுமதிக்கக் கூடாது. பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிக்க அனுமதிக்கக் கூடாது. அனுமதித்தால் எதிர் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ளும் நிலை ஏற்படும்.

    சிபிஐ மாநிலச் செயலாளர்  இரா.முத்தரசன்

“தமிழகத்தில் சாதியவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இடமில்லை. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கக் கூடாது. அவர்களது பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதியை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்”

    விசிக தலைவர் திருமாவளவன் 

“மதச்சார்பின்மையை தமிழகத்தில் மேலும் வலுப்படுத்துவோம். மக்களை பிளவுபடுத்தும் சக்திகளை முறியடிக்கும் வல்லமை மதச்சார்பற்ற கட்சிகளுக்கு உண்டு”

      மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா