தூத்துக்குடி, ஜூன் 19- தமிழகம் முழுவதும் இன் னும் 3 மாதங்களில் மீனவர் களுக்கான தனி வங்கி தொடங் கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித் தார். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே தரு வைகுளத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். வேப்பலோடை தொடக்க வேளாண்மை கூட் டுறவு செயலாளர் கென்னடி வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால் நடை பராமரிப்பு துறை அமைச் சர் அனிதா ஆர்.ராதாகிருஷ் ணன் கலந்து கொண்டு வேப்பலோடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தின் மூலம் மீனவர்கள் மற்றும் மீனவ மகளிருக்கு கிஸான் கிரெடிட் கார்டு திட்டத்தில் கடன் உதவி மற்றும் குளிரூரட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் வழங் கினார். தொடர்ந்து பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய வெளிப்பொருத்தும் எந்தி ரங்கள், இருசக்கர வாகனங்க ளில் குளிரூட்டப்பட்ட பெட்டி கள் கொண்டு மீன் விற்பனை செய்யும் வாகனம் உள்ளிட்ட சுமார் 1 கோடி ரூபாய் மதிப் பிலான நலத்திட்ட உதவி களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசிய தாவது:
தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து மீனவர்களுக் கான பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரு கிறார். மீனவர்களின் வாழ்வா தாரம் உயரும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. விவசாயி களுக்கு தனி வங்கிகள் இருப் பது போல், மீனவர்களுக் கும் தனி வங்கி அமைக்க வேண்டும் என்ற வகையில் முதலமைச்சர் எடுத்த நட வடிக்கையின் காரணமாக, தற்போது மீனவர்களுக்கான தனி வங்கி அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த பணி கள் நிறைவு பெற்றவுடன் 3 மாதங்களில் மீனவர் களுக்கான தனி வங்கி தமிழ கம் முழுவதும் தொடங்கப் படும். இவ்வாறு அவர் பேசி னார். நிகழ்ச்சியில் கோவில் பட்டி கோட்டாட்சியர் மகா லட்சுமி, திமுக மாநில மாண வரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ராம ஜெயம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், இணை இயக்குனர் அமல் சேவியர், ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, யூனி யன் ஆணையாளர் வெங்க டாசலம், யூனியன் கூடுதல் ஆணையாளர் பாண்டி ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.