tamilnadu

img

அறிவியல் கதிர் - ரமணன்

உயிரி டீசல் தயாரிக்க புதிய கிரியா ஊக்கி

டீசல், பெட்ரோல் போன்ற படிம எரிபொருட்  கள் புதுப்பிக்கத்தக்கவை அல்ல; தீர்ந்து  போகக்கூடியவை. இவற்றிற்கு மாற்றாக உயிரி  டீசல் தயாரிக்கப்படுகிறது. இந்த முறையில் தண்ணீர் ஒரு துணைப் பொருளாக உண்டா கிறது. இது செயல்படும் தளங்களுக்கு சேதம்  உண்டாக்குகிறது. இதை நீக்குவதற்கு தண்ணீர்  தடுப்பு கிரியாஊக்கி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஆய்வு ‘ முன்னேறிய செயல் பொருட்கள்’ ( Advanced Functional Materials) என்கிற இதழில் வெளி வந்துள்ளது. இதில் இந்தியாவின் அசாமை சேர்ந்த அர்பிதா தாஸ், கங்கனா சைகியா, சாமு வேல் லால்தசுவாலா, ஒடிசாவை சேர்ந்த சந்திர காந்தா குஹாய்ட், பிமலேந்து அதிகாரி, இங்கி லாந்தை சேர்ந்த டா ஷி மற்றும் சீனாவை சேர்ந்த ஹு லி ஆகியோர் உள்ளனர். தாமரை  இலைகளின் தண்ணீர் ஒட்டாத தன்மை போன்ற இயல்பை இந்த கிரியாஊக்கிகள் பெற்றுள்ளன. அவை அதிக திறன் வாய்ந்த தாகவும் பலமுறை மீண்டும் மீண்டும் பயன்  படுத்தக்கூடியதாகவும் உள்ளதால் குறை வான செலவு பிடிக்கின்றன. இவை செல்லு லோஸ் எனும் தாவரப் பொருளிலிருந்து தயா ரிக்கப்படுவதால் சுற்றுசூழலுக்கு கெடுதல் இல்லாதது; அதிக அளவில் கிடைக்கூடியது; சிக்கனமானது. இதனால் உயிரி டீசல் தயா ரிக்கும் செலவு குறைவதுடன் நீடித்த சக்தியை  சுலபமாக அணுக முடிகிறது என்கிறார் முனை வர் ரோஹிதம். இப்போது இந்தியாவில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ87/. உயிரி டீசல் தயாரிக்க ரூ100/ ஆகிறது. புதிய முறையில் ரூ31/  க்கு தயாரிக்க இயலும்.

காசா போரும்  சுற்றுச் சூழல் அபாயங்களும் 

காசா போரினால் ஏற்பட்டுள்ள சுற்றுசூழல் பாதிப்பு கள் குறித்து ஐ.நா சபையின் முதற்கட்ட மதிப்பீடு கள் மனிதகுலத்தையே பாதிக்கும் நீண்ட கால விளைவு களை பட்டியலிட்டுள்ளது.  1.    கடல்நீரை குடிநீராக்குதல், கழிவு நீர் சுத்தி கரிப்பு, சூரிய ஆற்றல், கடற்கரை சதுப்புநிலங் குளை மீட்டெடுப்பது ஆகியவற்றில் காசாவில்  அண்மையில் நிகழ்ந்துள்ள சின்ன முன்னேற்றங் குளையும் போரானது அழித்துவிட்டது.  2.    39மில்லியன் டன் இடிபாடுகள் சேர்ந்துள்ளன. வெடிக்காத குண்டுகள், ஆஸ்பெஸ்டாஸ், ஆலை மற்றும் மருத்துவக் கழிவுகள் ஆகியவற்றால் எழும்  தூசும் ஏற்படும் மாசும் உடல்நலத்திற்கு பெரும் அபாயத்தை உண்டாக்குகின்றன.  3.    கடற்கரைகள், கரையோர நீராதாரங்கள், நிலம் மற்றும் நன்னீர் ஆகியவற்றில் கழிவு நீர் கலந்து  நோய்க்கிருமிகள், நுண்பிளாஸ்டிக், அபாயகர மான வேதிப் பொருட்கள் ஆகியவற்றால் மாசடைந்  துள்ளன.  4. திடக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. சமையல் எரிவாயு இல்லாததால் மக்கள்  மரம், பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை எரி பொருளாக பயன்படுத்துகின்றனர். இதோடு எரி பொருட்கள் எரிவது, நெருப்பு ஆகியவற்றால் காற்றின் தரம் மிகவும் மோசமாக குறைந்திருக்கும் வாய்ப்பு உள்ளது.  5.    வெடிபொருட்களில் உள்ள கன உலோகங்கள், வேதிப்பொருட்கள் போர் முடிந்தபின்னும் நீண்ட காலம் நிலத்திலும் நீரிலும் தங்கியிருக்கும். வெடிக்காத குண்டுகள் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை உண்டுபண்ணும்.  6.    அழிக்கப்பட்ட சூரிய ஆற்றல் தொகுதிகளிலிருந்து ஈயம் மற்ற கன உலோகங்கள் நிலத்திலும் நீரிலும்  கசிந்து புது வகை மாசை உண்டாக்கும்.  7.    ஹமாசின் சுரங்க அமைப்புகளும் அவற்றை இஸ்ரேல் அழித்ததும் நிலத்தடி நீரை மாசுபடு தலுக்கு இட்டு சென்றிருக்கும். திடமற்ற நிலப் பரப்பி னால் அதன் மீது கட்டப்படும் கட்டடங்கள் பலவீன மாதல் போன்ற நீண்ட கால அபாயங்கள் உள்ளன. 

சூலக நோய்களுக்கு புதிய மருந்து

பாலி சிஸ்டிக் ஓவரி சின்ட்ரம்(PCO) எனப் படும் சூல் சுரப்பி கோளாறு, பத்தில் ஒரு  பெண்ணுக்கு உள்ளதாம். பெண்களின் மலட்டுத் தன்மைக்கு இது ஒரு முக்கிய காரணம். இப்போதுள்ள சிகிச்சையானது குறிப்பிட்ட அறிகுறிகளை கட்டுப்படுத்தும் விதமாக  மட்டுமே உள்ளது. சீனாவிலுள்ள ஃபுடான் பல்க லைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு முன்னோடி  சோதனையில் மலேரியா நோய்க்கு தரப்படும் ஒரு மருந்து இந்தக் குறைபாட்டையும் குணப்படுத்தலாம் என்று காட்டியுள்ளது. ஆர்டிமிசினின் எனப்படும் மூலிகையின் செயற்கை தயாரிப்பே இந்த மருந்து. ஒட்டுண்ணிகளால் ஏற்படும் காய்ச்சலுக்கு சீனாவில் பழங்காலத்தில் தரப்பட்டது இந்த  மூலிகை மருந்து. முதலில் எலிகளில் சோதிக்  கப்பட்டபின் மனிதர்களுக்கு சோதிக்கப்பட்ட தாம். பிசிஓவை ஏற்படுத்தும் இரண்டு ஹார்மோன் சுரப்புகளை இந்த மருந்து கட்டுப்படுத்துவது தெரிய வந்துள்ளது. இந்த நோயின் முக்கிய அறிகுறி மலட்டுத்தன்மை. மாதவிலக்கு தவறுதல், தாமதமாதல், வலி மிகுந்த மாத விலக்கு, சூல் பெரிதாவது, அதன்  மீது சிஸ்ட் உண்டாவது, உடல் முடி அதிகமா வது, உடல் எடை கூடுவது, சரும கோளாறு கள், முடி அடர்த்தி குறைவது மற்றும் அடிக்கடி  மாறும் மனநிலை ஆகியவை. இந்த சோதனை  28 வயதுள்ள 19 சீன பெண்களிடம் செய்யப்  பட்டது. அதில் 12 பேர் இயல்பான மாத விலக்குக்கு திரும்பினர். குறைவான் நபர்களி டமே செய்யப்பட்டிருப்பதாலும் நீண்ட கால  விளைவுகளை புரிந்து கொள்ளவும் மருந்தின்  சரியான அளவுகளை காணவும் மேற்கொண்டு ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என கிறார் சுவீடனிலுள்ள கரோலின்ஸ்கா கழகத்தை சேர்ந்த நாளமில்ல சுரப்பி நிபுணர் எலிசபெட் ஸ்டெனர்-விக்டோரின். ஆனாலும் பிசிஓ சிகிச்சையில் இது ஒரு நம்பிக்கையூட்டும் கண்டுபிடிப்பு என்கிறார் அவர். இது சயின்ஸ்  இதழில் வெளிவந்துள்ளது.