tamilnadu

img

குழந்தைகளிடம் பெரியவர்களைக் கற்றுணரச் சொல்லும் குரங்கு பெடல்!

குரங்கு பெடல் திரைப்படத்தினை அவி நாசியில் திரையிட்ட தினத்திலிருந்து நேற்று அத்திரைப்படத்திற்கான பாராட்டு விழா வினை நடத்தியது வரையிலான நாட்களில் தொடர்ந்து மகிழ்வான அனுபவங்கள் நிரம்பிக்  கொண்டே இருந்தன. “எல்லா நிகழ்ச்சிக்கும் கூப்பிடுவீங்க, படம்  பார்க்க மட்டும் ஏன் கூப்பிடல?” “தம்பி, குரங்கு பெடல் படத்துல வர்ற ஊரா ட்சிக்கோட்டை மலைக்கு நேத்து குடும்பத் தோட போயிருந்தோம்” “சம்பத், எங்க அப்பா ஒரு நெசவாளி. அவ ரோட கஷ்டத்தை மீண்டும் இந்தப் படம்  பார்க்கும்போது உணர முடிஞ்சது. இன் னைக்கு நாந்தான் உனக்கு டீ வாங்கித் தரு வேன்.” “சார், குரங்கு பெடல் படத்துல வர்றமாரி சைக்கிள் ஓட்டப் பழகின காலம் ரொம்ப அலா தியானது. அதப்பத்தி நானொரு கட்டுரை எழுதி இருக்கேன். படிச்சுப் பாருங்க” இப்படி தினந்தோறும் யாரேனும் ஒருவர் அத்திரைப்படம் குறித்த நினைவை என் மன திற்குள் வரைந்து வைத்துக் கொண்டே இருந்த னர். ஒருநாள் மாணவி ஒருவரின் கடிதமொன்று  வீட்டிற்கு வந்திருந்தது. அதில் அப்படத்தை காணும்போது, தனது அப்பாவின் முகத்தில்  ஆழமாக மகிழ்ச்சியின் ரேகை படர்ந்திருந் ததை கண்டு ரசித்ததாக எழுதியிருந்தார்.

எல்லாமே நிறைவாக இருக்கிறதெனினும் அத்திரைப்படக் கலைஞர்களுக்கு பாராட்டு  விழா என்பதாக இன்னும் சில மணிநேரங்களை  எங்களுக்குத் தாருங்கள் என திரைரசி கர்களை எப்படி நாம் கேட்க முடியும் என தயங்கி  நின்றோம். ஆனால் அப்போதே பாராட்டு விழா விற்கான எல்லா தயாரிப்புகளும் நிறைவாகி இருந்தது. நிகழ்வு தினத்திற்கே உரிய பதட்டத்தோடு  காலி நாற்காலிகளை வெறித்தபடி இருக்கும் போதே எழுத்தாளர் தமிழ்செல்வன் வந்துவிட்டி ருந்தார். சில நிமிடங்களிலேயே இன்னும் சில  வாகனங்களில் வந்திறங்கினார்கள் திரைக் கலைஞர்கள். நிகழ்வு துவங்கும் முன்பே அரங்கை நிறைத்துவிட்ட பார்வையாளர்களில் பெரும் பான்மையோர் ஈரோடு, திருப்பூர், கோவை என  வெளியூரிலிருந்து வந்தவர்கள் என்பது திரை  ரசிகர்களின் நன்றியுணர்வை வெளிப்படுத்து வதாக இருந்தது. ஆசிரியர் க.சம்பத்குமார் தலைமை ஏற்க, ந.விஜய் சுதாகர் வர வேற்றார். நிகழ்வில் அரசியல் செயற்பாட்டாளர் சாய்  கண்ணன் “தலைமை செயலகம்” வெப் சீரிஸ்  குறித்து பேச, அவிநாசி தமுஎகச உறுப்பி னர் சிவராசன், குரங்கு பெடல் குறித்த தனது  பார்வையை பகிர்ந்து கொண்டார். இவர் களோடு ச.லக்‌ஷணா எனும் கல்லூரி மாணவி திரைப்படத்தை தனது குடும்ப அமைப்பு நிலையிலிருந்தும் பெரியோர்களிடமுள்ள குழந்தைமை குறித்த தவறான புரிதல்களை அச்சமின்றி வெடிப்புறப் பேசியது பலராலும் பாராட்டப்பெற்றது.

தனித்துவமொழி

சிறப்புரை நிகழ்த்திய ச.தமிழ்செல்வன் இத்திரைப்படத்தை குழந்தைகளின் உல கோடு தொடர்புபடுத்தி உரையைத் தொடங்கி னார். திரைமொழி என்பது தனித்துவமா னது. அந்த மொழியைக் கற்றுக்கொண்டு சமூ கத்திற்கான கருவியாக திரைப்படத்தைக் கையாளும் இயக்குநர் கமலக்கண்ணனையும் உடன் பணியாற்றிய கலைஞர்களையும் வெகு வாகப் பாராட்டினார். அவரது உரையினூடாக கல்வி, குடி கலாச்சாரம், குழந்தைகள் குறித்த  பெரியோர் பார்வை, புத்தக வாசிப்பின் அவ சியம் என அனைத்தையும் குறித்து கவ னப்படுத்தினார். ஏற்புரையில் கதாசிரியர் ராசி அழகப்பன், தனது சைக்கிள் சிறுகதையை ஒட்டி எழுதப்  பட்ட அழுத்தமான திரைகதையே படத்தின்  வெற்றிக்கு பங்காற்றியது என்றார். இயக்கு நர் கமலகண்ணன் பேசிய உரையில், குழந்தைகளுக்கு பொது இடம் என்கிற கருத்தாக்கத்தையே அறிமுகப்படுத்தாமல் தனிமையை புகட்டி வளர்ப்பதன் அபாயத்தை உணர்த்திப் பேசியது சிந்திக்கக் கூடியதாக அமைந்தது. தனது திரைப்படத்தை எப்போ தும் கொண்டாடி வரும் தமுஎகச போன்ற கலை  இலக்கிய அமைப்புகளுக்கு நன்றி தெரி வித்தார். தமுஎகச மாநில செயற்குழு உறுப்பி னர் ஆர்.ஈஸ்வரன், இயக்குநர் கமலக்கண்ண னுக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தார். பாடலாசிரியர் போ.மணிவண்ணன் தனது மாணவரான இயக்குநரின் படைப்பாக்க  வெற்றியை உச்சி முகர்ந்து கொண்டாடினார். அதோடு திரைப்படத்தில் பங்காற்றிய சிறு வர்களின் பள்ளி கல்விக்கான செலவுகளுக்கு தான் பொறுப்பேற்பதாக குறிப்பிட்டது அந்நிகழ்வில் பெரும் வரவேற்பைப் பெற்றது.  நெகிழ்வானதாகவும் அமைந்தது. அவிநாசி தமுஎகச சார்பில் கொ.ரகு, ரா.ராஜேந்திரன், வே.தினகரன் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். நிறைவாக க.பரமேஸ்வ ரியின் நன்றியுரைக்குப் பிறகு உணவு அருந்த  அழைத்தும்கூட வராமல் கூட்டமாக நின்று திரைக் கலைஞர்களோடு நீண்ட நேரம் உரை யாடி மகிழ்ந்த பங்கேற்பாளர்களின் உடல்  மொழி நிகழ்வின் வெற்றியை உறுதிப்படுத்தியது.

- க.சம்பத்குமார்