3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட ஒரு தற்காப்புக் கலை, கேரளாவின் பாரம்பரிய தற்காப் புக் கலையான களரிபயட்டு, உலகின் அனைத்து தற்காப்புக் கலைகளில் பழமையானது மற்றும் அறிவியல் பூர்வமாக கருதப்படுகிறது. மற்ற தற்காப்புக் கலை வடி வங்களைப் போல் அல்லா மல், களரிபயட்டு தீவிர பயிற்சியா னது உடற்பயிற்சி மற்றும் உடல் சுறுசுறுப்பு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தாமல், உடலின் ஆற்றல் அமைப்பிலும் கவனம் செலுத்துகிறது. இது உடல் மற்றும் மனம் இரண்டின் சரியான ஒத்திசைவு. களரிபயட்டு என்பது வெற்றுக் கைப் போர் முதல் நீண்ட கைத்தடி, குட்டைக் குச்சி, வளைந்த குச்சி, வாள் மற்றும் கேடயம், ஈட்டி, தண்டாயுதம் மற்றும் நெகிழ்வான வாள் (உருமி) உள்ளிட்ட பல தரப்பட்ட ஆயுதங்கள் வரையிலான பரந்த அளவி லான போர் நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது. சுறுசுறுப்பும் நெகிழ்வுத் தன்மையும் இந்த பழம்பெரும் கலை வடிவத்தின் தனிச் சிறப்புகளாகும். இந்த தற்காப்புக் கலையின் நுணுக்கம் மற்றும் செயல் திறன் ஆகியவற்றால் அச்சுறுத்தப்பட்ட ஆங்கிலேயர்கள், இந்தி யாவில் தங்கள் ஆட்சியின் போது நாட்டில் களரிபயட்டு பயிற்சி யைத் தடை செய்யும் அளவிற்கு சென்றனர்.
கேரளாவைப் பொறுத்தவரை களரிபயட்டு என்பது தற்காப்புக் கலை மட்டுமல்ல. அதன் வேர்கள் மாநிலத்தின் கலாச் சார கட்டமைப்பில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளன; இரண்டையும் பிரிக்க முடியாது. கேரளாவின் கலை வடிவங் களில் களரிபயட்டு ஏற்படுத்தியதைப் போல, வேறு எந்த தற்காப்புக் கலை வடிவமும் ஒரு மாநிலத்தின் பூர்வீக செயல் திறன் மரபுகளில் இவ்வளவு ஆழமான தாக்கத்தையும் தாகத்தையும் ஏற்படுத்தியதாக அறியப்படவில்லை. இந்தியாவில் தோன்றிய களரி பயிற்சி உடலுக்கும், உள்ளத்துக்கும் உற்சாகம் தரக்கூடியது என்கின்றனர் களரி பயிற்சியாளர்கள். 38 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் இம்மாத இறுதி யில் (ஜனவரி 2025) உத்தரகண்டில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளுக்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் வீராங் கனைகள் பங்கேற்கின்றனர். இதற்கு முன்பு நடந்த 37 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில், தமிழக வீரர்கள் நமது பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிபயட்டு போட்டி யில் பங்கு பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் குவித்தனர். அப்பதக்கங்களின் மூலமாக வீரர்களுக்கு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடஒதுக்கீடு கிடைத்து பயன் பெற்றனர். ஆனால், 38 ஆவது தேசிய போட்டிகளில், களரிபயட்டு விளை யாட்டை போட்டித் தன்மையில் (competitive category) இருந்து நீக்கி, அறிமுக வகை (demo category) விளையாட்டு என அறி வித்துள்ளனர். இது இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் எடுத்த தன்னிச்சையான முடிவாகும். இதனால் மாணவர்கள் தங்கள் திறனை வெளிக்காட்டி பதக்கங்கள் பெற இயலாத நிலை உரு வாகியுள்ளது. பல ஆண்டுகளாக பயிற்சி பெற்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. போட்டி வகையில் இருந்து நீக்கப்பட்டதால், பதக்கங் களை வெல்ல முடியாத நிலையில் மாணவர்களுக்கு சலுகைகளும், இடஒதுக்கீடும் கிடைப்பது சவா லாகும். இது தொடர்பாக அரியா னாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீதிமன்றத்தை நாடி சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளார். இதை யடுத்து, இந்திய ஒலிம்பிக் அசோசியேஷனிடம் மீண்டும் களரி பயட்டு போட்டியை, ‘போட்டித் தன்மை’ கொண்ட பட்டிய லில் சேர்க்க நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இம்மாத இறுதியில் உத்தரகண்டில் நடைபெற உள்ள 38 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 10 வீரர்கள் களரிபயட்டு போட்டியில் பங்கேற்க முழுமையாக தயாராகிவிட்டனர். மேலும், இக்கலையை தமிழகம் முழுவதும் பல மாணவர்கள் பயின்று வருகின்றனர். எனவே, மாணவர்களின் எதிர்காலம் இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் எடுக்கும் முடிவில் உள்ளதால் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
துணை முதல்வருக்கு வேண்டுகோள்
தமிழ்நாடு களரிபயட்டு விளையாட்டு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.தேவராஜன், செயலாளர் க.வீரமணி ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கையில், “களரி விளையாட்டு என்பது நமது பாரம்பரிய தற்காப்புக் கலையாகும். மேலும் தற்காப்பு, மருத்துவம், யோகா - இம்மூன்றையும் உள்ளடக்கிய போர் கலையும்கூட. இந்த கலையை ஊக்கப்படுத்த வேண்டியவர்கள் இதை போட்டியாக அறிவிக்காமல் (டெமோ) அறிமுக விளை யாட்டாக அறிவித்திருக்கிறார்கள். இதனால், களரி விளை யாட்டு வீரர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். கேலோ இந்தியா விளையாட்டு மற்றும் தேசிய விளை யாட்டுப் போட்டிகளில் நிரந்தரமாக சேர்ப்பதற்கு இந்தியன் களரி பயட்டு சம்மேளனத்தின் செயலாளர் மறைந்த வழக்கறிஞர் பூந்துறை தொடர் முயற்சிகளை மேற்கொண்டார். இதனால், கடந்த ஆண்டு 37 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் களரியும் சேர்க்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இதில் கலந்து கொண்டாலும், தமிழ்நாட்டில் இருந்து 8 வீரர்கள் பங்கேற்றா லும், 4 பதக்கங்களை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த னர். இந்த வீரர்களை பாராட்டிய நமது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஊக்கத் தொகையும் வழங்கிக் கவுரவப் படுத்தினார். இந்த வெற்றி உயர்கல்விக்கும் பயன்பட்டது. இந்நிலையில், களரி போட்டியை அறிமுக விளையாட்டு என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்திருப்பதால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இம்மாதம் இறுதியில் நடைபெறும் 38 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் களரியை இணைத்து போட்டி நடத்து வதற்கு, விளையாட்டு துறை அமைச்சரும் துணை முதல மைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசும், முதல்வரும் முழு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.