tamilnadu

img

கொஞ்சமாவது நெஞ்சில் ஈரம் உள்ளதா?

“ஒன்றிய அரசின் காலத்தே தலையீடு மணிப்பூரை காப்பாற்றியது” பிரதமர் மோடிதான் இவ்வாறு பேசியிருக்கிறார். இதனை பேசுவதற்கு அசாத்திய துணிச்சலும் மனசாட்சியை முழுவதுமாக கழற்றி வைக்கும் தைரியமும் வேண்டும். மாதக்கணக்கில் வன்முறைகள் மணிப்பூரில் நடந்தன. இரு இன மக்கள்  படுபயங்கர மாக மோதிக்கொண்டனர்.  நூற்றுக்கணக்கான வர்கள் கொல்லப்பட்டனர். பல தேவாலயங் கள் எரிந்து நாசமாயின.   பெண்கள் நிர்வாண மாக்கப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டனர்.  இவ்வளவு நடந்தும் ஒருமுறை கூட பிரதமர் என்ற முறையில் மோடி அங்கு செல்லவில்லை. வன்முறைகளை கண்டிக்கக் கூட இல்லை. இப்பொழுது மோடி சொல்கிறார் அவரது தலையீடு மணிப்பூரை காப்பாற்றியதாம்!  மனசாட்சி குறித்து பயம் துளியும் இல்லாத ஒருவர் தான் இப்படி பேச முடியும்!