கைநெசவாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் 1964 முதல் 1978 வரை பணியாற்றிய தோழர் எஸ். நடராஜன் தொடக்கத்தில் வள்ளலாரின் சன்மார்க்க நெறிகளால் ஈர்க்கப்பட்டிருந்தவர். முதலில் ஒரே இயக்கமாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக, மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவர். 1948ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது நாடு முழுவதும் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழகத்தில் கைது செய்யப்பட்ட எஸ். நடராஜன் உட்பட 300 தோழர்கள் சேலம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர். கம்யூனிஸ்ட்டுகளைத் தண்டனைக் கைதிகளாக நடத்தக் கூடாது, அரசியல் கைதிகளுக்குரிய மதிப்புடன் நடத்திட வேண்டும் என வலியுறுத்தி சிறைக்குள்ளேயே கம்யூனிஸ்ட்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அன்றைய மாகாண காவல்துறை சிறைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 22 தோழர்கள் கொல்லப்பட்டார்கள். கட்சி ஆண்டுதோறும் சேலம் சிறைத் தியாகிகள் நினைவைப் போற்றி வருகிறது. துப்பாக்கிச் சூட்டின்போது காவல்துறையின் குறி தவறியதால் தப்பித்து விடுதலையான வர்தான் எஸ். நடராஜன். சுதந்திரப் போராட்டக் காலத்திலும் சுதந்திர இந்தியா விலும் பல ஆண்டுகள் சிறை சென்ற தோழர் எஸ்.நடராஜன் தென்னாற்காடு மாவட்டத்தில் கட்சி வளர்ச்சியில் முக்கியமான பங்காற்றியவர்.