இராஜபாளையம், ஏப்.1- இராஜபாளையம் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏப்ரல் 1 சனிக்கிழமையன்று இராஜ பாளையத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். ஆன் லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க மறுக்கும், மாமேதை காரல் மார்க்ஸை இழிவு படுத்தி பேசி, சனாதனத்தை தூக்கிப் பிடிக்கிற ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரி வித்து இராஜபாளையம் காந்தி சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜு னன் தலைமையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. காந்தி சிலை முன்பிருந்து ஊர்வல மாக கிளம்பிய கட்சியினரை காவல் துறையினர் செல்லவிடாமல் தடுத்த னர். இராஜபாளையம் -செங்கோட்டை செல்லும் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றினர். இப்போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமர், முனியாண்டி, மாரியப்பன், சரோஜா, அன்புச்செல்வன், பெத்துராஜ் ,சசி குமார், ஜெயக்குமார், பெனரி பால சுப்பிரமணியன், உமாமகேஸ்வரி, பாரத் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.