tamilnadu

img

சத்துணவு ஊழியர்களின் 72 மணிநேர பட்டினிப் போராட்டம் தொடங்கியது

சென்னை, ஜூன் 26- 50 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளி ட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கத்தின் சார்பில் 72  மணி நேர பட்டினிப் போராட்டம் சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் திங்களன்று (ஜூன் 26)  தொடங்கியது. மாநிலத் தலைவர் ஆர்.கலா தலைமை தாங்கினார். போராட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பேசுகையில், “இதுவரை பெற்றிருக்கக்கூடிய அனைத்து சலுகைகளும் தொடர்ந்து போராடிப் பெற் றதுதான். சத்துணவு ஊழி யர்களும் பல கட்ட போராட்டங்களை நடத்தி யதன் விளைவாகத்தான் இன்று சிறப்பு கால முறை ஊதியம் பெற முடிந்திருக்கிறது. சத்துணவு உட்பட அனைத்து துறைகளிலும் தனியார்மயம் புகுத்தப்படு கிறது. அரசு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால் அதை அமல்படுத்தும் விதம் தவறு என சுட்டிக்காட்டு கிறோம். ஏனென்றால் இந்த சிற்றுண்டியை தனியாரிடம் கொடுக்காமல் சத்துணவு ஊழியர்களிடமே கொடுத்திருந்தால் அரசுக்கு செலவு குறைந்திருக்கும்” என்றார். 

ஒரு குழந்தைக்கு 1 ரூபாய் 60 காசு  போதுமா?

மேலும், “காலை சிற்றுண்டி திட்டத்திற்கு மையப்படுத்தப்பட்ட சமையல் கூடம் என்றார்கள். அது தோல்வியடைந்தது. இப்போது சுய உதவிக் குழுக்கள் மூலம் அந்த திட் டம்  செயல்படுத்தப்படு கிறது.  அதற்கு ஒரு குழந்தைக்கு 12 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது மதிய உணவிற்கு அரசு ஒரு குழந்தைக்கு வழங்குவது 1 ரூபாய் 60 காசு. சாம்பார் வைத்தால் 1 ரூபாய் 75 பைசா. சத்துணவு திட்டத்தில் பணியாற்றக் கூடிய ஊழியர்கள் ஊதி யத்திற்காக மட்டும் வேலை செய்யவில்லை. சேவை என்ற அடிப்படையில் வேலை செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஒன்றிய, மாநில அரசு களுக்கு விலைவாசி எந்த ளவு உயர்ந்திருக்கிறது என்பது தெரியாதா? அரசு சமையல் சிலிண்டருக்கு 400 ரூபாய் வழங்குகிறது. ஆனால் தற்போது சிலிண்ட ரின் விலை 1,200 ரூபாய்.  குழந்தைகளுக்கு வழங்கப் படும் உணவு தடைபடக் கூடாது என்ற எண்ணத்தில் தங்கள் ஊதியத்தின் ஒரு பகுதியை ஊழியர்கள் செலவு செய்கிறார்கள். அரசு இதுகுறித்து சிந்திக்க வேண்டாமா” எனவும் சுகுமாறன் கேள்வி எழுப்பி னார்.

50 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

50 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பி, காலை சிற்றுண்டி திட்டத்தை  ஊழியர்களிடமே வழங்கி னால், அந்த திட்டம் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.  தமிழ்நாட்டிலும் அனைத்து துறைகளையும் ஒப்பந்த அடிப்படையில் விட்டால், அந்த ஊழியர்கள் அரசு சொல்வதை கேட்பார்களா? அல்லது அந்த ஒப்பந்த தாரர் கூறுவதை கேட்பார் களா? எனவேதான் தனி யார்மயத்தை எதிர்க்கிறோம் என்றும் அவர் கூறினார். சத்துணவு உள்ளிட்ட திட்டங்களில் பணியாற்றக் கூடிய ஊழியர்களை நிரந்த ரப்படுத்துவோம் என்று முதல்வர் கூறினார். ஆனால் ஆட்சிக்கு இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்பும் 40 ஆண்டுகாலமாக பணி யாற்றக் கூடிய ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதில் அர சுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது? அரசு ஒப்பந்த முறையை கைவிட்டு, இந்த ஊழியர்களை பணிநிரந்த ரம் செய்து காலமுறை ஊதி யம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு துறைகளில், அரசு திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை பாது காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே இந்த ஊழியர்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் ஓய்வூதி யம் வழங்கி இந்த ஊழி யர்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்றும் சுகுமாறன் கேட்டுக் கொண்டார்.

சத்துணவு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அ.மலர்விழி கூறுகையில், 40  ஆண்டு காலமாக பணி புரிந்து வரும் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழி யராக்க வேண்டும், சத்து ணவு திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 2000 ஓய்வூதியத்தை உயர்த்தி 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த தொகையாக 5 லட்சம் வழங்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 50 ஆயிரம் காலிப்பணியிடங்களை உட னடியாக நிரப்ப வேண்டும் என்றார். சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் வாக்குறுதியில் அறி வித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதில் சங்கத்தின்  மாநி லத் துணைத் தலைவர்கள் பே.பேயத்தேவன், ஆ. பெரியசாமி, கே.அண்ணா துரை, மு.தமிழரசன், ஆர்.எம்.மஞ்சுளா, த.வாசுகி, தி.ஜெயந்தி, மாநிலச் செய லாளர்கள் எஸ்.கற்பகம்,  எஸ்.சுமதி, பெ.மகேஸ் வரி, எஸ்.பாண்டிச்செல்வி, அ.லதா, ஜெ.நிர்மலா, ஆ.ஜெஸி உள்ளிட்டு மாநி லம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.