கிரீஸ் நாட்டிலுள்ள ஆன்டிகிய்தீரா எனும் தீவில் 2ஆம் நூற்றாண்டை(பொ.ஆ.மு) சேர்ந்த இயந்திரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருந்தது. அதன் பயன்பாடு என்னவென்று இதுவரை அறிய முடியாமலி ருந்தது. சிக்கலான கியர் தொடர்களும் பல் சக்கரங்களும் கொண்ட இது மிக நுணக்கமான கருவிகளால் உண்டாக்கப்பட்டிருக்கிறதாம். நூறாண்டுகளுக்கு மேலாக அறிவியலாளர்களைக் கவர்ந்த இது குறித்த ஆய்வு பல காலமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். மிகப் பழமையான அனலாக் வகை கணினி எனக் கருதப்பட்ட இது உண்மையில் ஒரு சூரிய வகை காலம் காட்டி(காலண்டர்). நிலவு, கோள்களின் நிலைகள் மற்றும் விண் மறைப்புகள்(எக்ளிப்ஸ்) ஆகியவற்றை பல பத்தாண்டுகளுக்கு முன்பாகவே கணிக்கக்கூடியதாம். இது போன்ற நுணுக்கமான இயந்திரம் 14ஆம் நூற்றாண்டு வரை உருவாக்கப்படவில்லை. இப்போது கிளாஸ்கோ பல்கலைக்கழக விண்வெளி அறிவியலாளர்கள் கருந்துளைகளின் மோதலின் போது வெளி விடப்படும் புவிஈர்ப்பு அலைகளை ஆய்வதற்காக உருவாக்கப்பட்ட புள்ளிவிவர மாட லிங் தொழில் நுணுக்கத்தை இந்த இயந்திரத்தின் வளையம் ஒன்றிற்கு பொருத்தி ஆய்வு செய்த னர். அதனடியில் சீரான இடைவெளியில் துவாரங்கள் குறித்த விவரங்கள் தெரிய வந்தது. ஆனால் அந்த வளையம் உடைந்து போயிருப்பதால் மொத்தம் எத்தனை துளைகள் இருந்தன என்று தெரிய வில்லை. இந்த கருவி ஒரு திரைப்படத்தில் கால இயந்திரமாக காட்டப்பட்டிருக்கிறது.
பூச்சிக்கொல்லி மருந்துகளிலிருந்து பாதுகாப்பு
வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும்போது, அதிலுள்ள ஆர்கனோ பாஸ்ஃபேட்ஸ் எனும் வேதிப் பொருட்கள், தெளிப்பவ ரின் உடலில் தீங்கு விளைவிக்கின்றன. நரம்பு மற்றும் தசைகளை பாதித்து மூச்சுத் திணறல், முடக்கு வாதம் மற்றும் தசை தளர்வு ஆகியவற்றை உண்டாக்குகின்றன. இதற்கு தீர்வாக தீங்கு நேராத வண்ணம் காக்கும் ஆடை ஒன்றை பெங்க ளூரிலுள்ள இன்ஸ்டெம் (inStem) எனும் ஆய்வுக் கழகம் தயாரித்துள்ளது. இந்த ஆடைகளிலுள்ள சிறு மூலக்கூறுகள் அந்த வேதிப்பொருளை உடைத்து விடுகின்றன. இந்த மூலக்கூறுகள் நேரடியாக ஆடையின் இழைகளோடு இணைக்கப்பட்டிருப்பதால், அதன் செயல்திறன் 150 முறை துவைப்பு வரை நிலைத்து நிற்கிறது. இதற்கு முன் இதே கழகம் கண்டுபிடித்த ஜெல்லைவிட இது எளிதானது. மருந்து தெளிப்பதில் ஈடுபடுபவர்கள் இதை தொடர்ந்து பயன்படுத்துவர் என்பதால் இது ஒரு பெரும் முன்னேற்றம் ஆகும். சாதாரண ஆடை கள் மற்றும் இந்த காப்பு ஆடைகளை எலிகளில் சோதித்ததில் காப்பு ஆடைகள் கொண்ட எலிகளின் உடலில் நரம்பு தசை தொடர்பான என்சைம் பாதிக் கப்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கண்டு பிடிப்பு செப்பியோ ஹெல்த் பிரவேட் லிமிடெட்(Sepio Health Pvt Ltd) என்பதன் உதவியோடு செய்யப் பட்டுள்ளதாம்.
டெங்கு கிருமிகளும் கொரோனா தொற்றும்
டெங்கு கிருமிகள் கொரோனா கிருமிகளைக் கட்டுப்படுத்தியதா? அதனால்தான் மேற்கத்திய நாடு கள், அமெரிக்கா போன்றவற்றைவிட இந்தியாவில் குறைவான மரணங்களும் தொற்றின் தீவிரம் குறைவாகவும் இருந்ததா? இந்தக் கேள்விகள் குறித்து கொல்கத்தாவிலுள்ள சிஎஸ்ஐஆர் வேதி உயிரி யல் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு, இந்த வியப்பிற்குரிய வாய்ப்புகள் இருக்கலாம் என்கிறது. நம் உடலில் டெங்கு கிருமிகளை எதிர்ப்பதற்காக உண்டாகும் ஆன்டிபாடிகளை (antibody) ஒருவகை கொரோனா கிருமிகளோடு சோதித்து பார்க்கப்பட்டது. டெங்கு ஆன்டிபாடிகள் அவைகளை வினை யாற்றவிடாமல் செய்வது காணப்பட்டது. ஆய்விற்கு கணினி மாடலிங்கும் கிருமி வளர்ப்பு முறையும் (culture) பயன்படுத்தப்பட்டன. கிருமி வளர்ப்பு முறையில், ஆன்டிபாடிகள் கொரோனா வைரசை சுற்றி வளைத்து அதன் புரதத்து டன் இணைவது நிரூபிக்கப்பட்டது என்கிறார் முதன்மை விஞ்ஞானியும் இந்த ஆய்வின் பிரதான ஆசிரி யருமான மருத்துவர் சுபஜித் பிஸ்வாஸ். ஆனால் இது எல்லா வகை கொரோனா கிருமிகளிலிருந்தும் பாது காக்கும் என்பது அவசியமில்லை. மேலும் டெங்கு கிருமிகள் அதிகம் உள்ள தென் கிழக்கு ஆசியா வில இந்த ஆன்டிபாடிகளால் கொரோனா கிருமிகளில் புதிய மரபணு மாற்றங்கள் உண்டாகுமா என்பதும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். மேலும் ஒரு டெங்கு கிருமி யால் ஏற்படும் ஆன்டிபாடிகள், இன்னொரு வகை டெங்கு கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு தருவ தில்லையாம். அவை கூடுதலான ஆபத்தையும் ஏற்படுத்தலாம். இந்த ஆய்வு மெடிக்கல் வைராலஜி என்கிற இதழில் வெளிவந்துள்ளது.
எச்ஐவி நோய்க்கு புதிய தடுப்பூசி
எச்ஐவி எனப்படும் பால்வினை நோய்களை தடுக்க, ஆண்டுக்கு இருமுறை போடப்படும் லென்காபவிர் (lenacapavir ) எனும் தடுப்பூசியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தென் ஆப்பி ரிக்கா மற்றும் உகாண்டாவில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பங்கெடுத்த 2134 பெண்களில் ஒரு வருக்குக் கூட எச்ஐவி தொற்றவில்லை. தற்போது பயன்படுத்தப்படும் தினசரி மாத்திரைகள் உட் கொண்டவர்களில் 1.5% மற்றும் 1.8% பெண்களுக்கு தொற்று ஏற்பட்டது. தினசரி எடுத்துக் கொள்வதை விட ஆண்டுக்கு இரு முறை என்பது வசதியானது என்கிறார் இதன் முதன்மை ஆய்வாளர் லிண்டா- கெய்ல் பெக்கர். எச்ஐவிக்கு தடுப்பு முறைகள் இருந்த போதிலும் இளைஞர்களிடம் இந்த தொற்றை தடுப்பது என்பது சவாலாக உள்ளது என்கிறார் அவர். கடந்த வருடம் மட்டும் உலகளவில் 1.3 மில்லி யன் புதிய தொற்றுகள் ஏற்பட்டுள் ளன. ஐக்கிய நாடுகள் சபை யின் இலக்குகளை எட்டுவதற்கும் இறுதியாக 2030க்குள் எச்ஐவி தொற்றை முற்றிலுமாக ஒழிப்ப தற்கும் லென்காபவிர் போன்ற புதிய, பலனளிக்கக்கூடிய தடுப்பு முறைகள் அவசியம். இதனுடய இரண்டாம் கட்ட சோதனையில், வெளிப்படையான முறையில் தடுப்பு மருந்தை தேர்ந்தெடுக் கும் வாய்ப்பை பங்கெடுப்பவர் களுக்கு அளித்து நடத்தப்பட உள் ளது. மேலும் மூன்றாம் பாலினத்த வர் போன்ற பலதரப்பட்ட பிரிவினரிடையேயும் இந்த சோதனை நடத்தப்படும். உலக சுகாதார நிறுவனம் இதன் முடிவுகளை பரிசீலித்து உலகளாவிய மற்றும் தேசிய திட்டங்களில் இதை இணைப்பது குறித்து முடிவெடுக்கும். இது கட்டுபடியாகும் விலையில் கிடைப்பதற்காக இதை நடத்தும் கிலாட் (Gilead) நிறு வனம் ஜெனிரிக் எனும் பொது உரிமத்தை அளிக்கும் என தெரிவித்துள்ளது.