tamilnadu

img

ரூ.1.10 கோடி முந்திரி கடத்தல் : முன்னாள் அமைச்சர் மகன் உட்பட 7 பேர் கைது

தூத்துக்குடி, நவ.27- தூத்துக்குடியில் ரூ.1.10 கோடி மதிப்பிலான முந்திரியை லாரியுடன் கடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்வ தற்காக, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள தனியார் முந்திரி ஆலையில் இருந்து ரூ.1.10 கோடி மதிப்புள்ள 12 டன் எடை கொண்ட முந்திரியுடன், தூத்துக்குடி துறைமுகத்திற்கு லாரி சென்றது.  இந்த லாரியை ஆலங்குளத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டிச் சென்றுள் ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியை காட்டி டிரைவரை மிரட்டி லாரியை கடத்தினர். இது தொடர்பாக டிரைவர் ஹரி, முந்திரி ஆலை மேலாளர் ஹரிகரன் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர், புதுக்கோட்டை காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அனைத்துச் சோதனை சாவடி களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த லாரியை மடக்கி பிடித்தனர்.

மேலும், பின்னால் காரில் வந்த 7 பேரை பிடித்தனர். பின்னர், தூத்துக்குடி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த சித செல்லப்ப பண்டியன் மகன் ஜெயசிங் (45), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கணபதி மகன் மாரிமுத்து (30), முறப்பநாடு கணபதி கோவில் தெருவைச் சேர்ந்த வேலு மகன் செந்தில் முருகன் (33), முள்ளக்காடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் மகன் மனோகரன் (35), பிரையண்ட் நகர் 12வது தெருவைச் சேர்ந்த சக்தி மகன் விஷ்ணு (25), முறப்பநாட்டைச் சேர்ந்த முனியசாமி மகன் பாண்டி (20), நெல்லை சமாதானபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (26) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள ஜெபசிங், தூத்துக்குடி முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப் பாண்டியனின் மகன் ஆவார். இந்த சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 7 பேரையும் காவல்துறையினர் விசாரணைக்காக தூத்துக்குடி அழைத்து சென்றனர்.

;