tamilnadu

பேரறிவாளனுக்கு 6வது முறையாக பரோல் நீட்டிப்பு

வேலூர், அக். 26- விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிறுநீரகத்தொற்று உள்ளிட்ட உடல் பிரச்சனைகளுக்கு மருத்துவரின் ஆலோச னைப்படி பேரறிவாளன் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் சுமார் 30  ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை யை அனுபவித்து வருகிறார். இவரது தாயார் அற்புதம்மாள் சிறையில் உள்ள பேரறிவாள னுக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ள பரோல் வழங்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தார். அதன்பேரில் கடந்த மே மாதம் 28 ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்  வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து  5 மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது. இன்று டன் பேரறிவாளனின் பரோல் நிறைவடைந்தது. இந்நிலையில் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு பரோலை மேலும் நீட்டிக்கக் கோரி அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறி வாளனுக்கு மீண்டும் 6-வது முறையாக ஒரு  மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனை யடுத்து, பேரறிவாளன் அவரின் வீட்டில் இருந்து வருகிறார்.

;