tamilnadu

img

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை.....

மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வண்ணாரபேட்டை பகுதி ஆர்.கே.கருப்பத்தேவர் தெருவைச் சேர்ந்தவர்  அய்யாவு  மகன் சரவணன் (35). இவர் உசிலம்பட்டி நகைக்கடை பஜாரில் நகைப்பட்டறை வைத்து நகைத் தொழில் செய்து வருகிறார்.இவருக்கு கடன் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். செவ்வாயன்று காலை வழக்கம் போல எழுந்து வீட்டை திறந்து கோலம்போட்டுவிட்டு, சற்று நேரத்தில் வீட்டை பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.

வெகுநேரமாகியும் வீடு திறக்கப் படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது சரவணன்  (35), அவரது மனைவி பூங்கோதை என்ற ஸ்ரீநிதி(30), மகள்கள் மகாலட்சுமி (10), அபிராமி (5)மற்றும் மகன் அமுதன் (5) ஆகிய ஐந்து பேரும்இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்களது உறவினர்களுக்கும் காவல்துறை யினருக்கும்  தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த  உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையிலான காவல்துறையினர்  சோதனை நடத்தியதில் அனைவரும் விஷம்அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் தன்னை தனது குடும்பத்தினர் கடனாளியாக ஆக்கி ஒரு ரூபாய் கூட குடும்பத்திற்கு ஒதுக்க முடியாமல் செய்துள்ளதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கடிதத்தைகைப்பற்றிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

5 பேரின் உடல்களும் உடற்கூராய்விற் காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.மேலும் இச்சம்பவம்குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;