எழுத்தறிவு திட்டத்தில் 5 லட்சம் பேர் தேர்ச்சி
முதல்வர் பாராட்டு
சென்னை, ஜூன் 14- எழுத்தறிவு பெறும் திட் டத்தில் தமிழ் நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 சதவிகித தேர்ச்சி விழுக்காட்டோடு இந்தியா விலேயே தமிழ்நாடு முத லிடத்தை பெற்றுள்ளது. முற்றிலும் எழுத்தறிவு இல்லாத 15 வயதுக்கு மேற் பட்டோர் அனைவரும் இந்த திட்டத்தில் பயிற்சி பெற்று தற்போது வெற்றிகரமாக தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சாதனைக்காக பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககப் பணியா ளர்கள் அனைவருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த அனைத்து பணியாளர்களை யும் பாராட்டி முதல்வர் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.