சென்னை, அக்.19- அக்டோபர் 31 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு , தென் மாவட்டங்கள், கேர ளா, வெளி மாநிலங்களு க்குச் செல்லும் அனைத்து விரைவு ரயில்களில் முன் பதிவு நிறைவடைந்துள்ளது. குறிப்பாக, முக்கிய வழித் தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் அதிக அளவில் காத்திருப்போர் பட்டியல் காணப்படும் நிலையில் அங்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து வருகிற 29, 30 ஆகிய தேதி களில் புறப்படும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த ரயில்களில் மொத்தமாக 7 ஆயிரம் பேர் வரை காத்தி ருப்போர் பட்டியலில் உள்ள னர். இதையடுத்து, பயணி கள் வசதிக்காக வருகிற 25 ஆம் தேதி முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில் களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரை அனுப் பப்பட்டுள்ளது. கேரளாவுக்கு சிறப்பு ரயில் இதேபோன்று, சாத் பண்டிகையை முன்னிட்டு வருகிற 23 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து புது தில்லி, அகமதாபாத்துக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டி கையை முன்னிட்டு தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில் வே நிர்வாகம் திட்டமிட்டுள் ளது. இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.