திருச்சி,நவ.14- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தர வின்படி விடுதலையான இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்ட வர்க்கான சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சிறப்பு முகாமில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடை யவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை ஒட்டியுள்ள தனித்தனி அறைகளில் 4பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மேலும் வழக்கி லிருந்து நீதிமன்ற விடுதலை செய்ய பின்னரும் இங்கேயும் அடைக்கி றீர்களே என வேதனை தெரி வித்ததாக முகாம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர்கள் மற்ற வெளிநாட்டு கைதிகளுடன் பேசவோ, தொடர்பு கொள்ளவோ அனு மதிக்கப்பட வில்லை. இந்தநிலையில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மற்ற வெளி நாட்டு கைதிகளை போன்று தங்களை சுதந்திரமாக நடமாட விட வேண்டும், தனி அறையில் அடை த்து வைக்கக்கூடாது என்ற கோரிக் கையை வலியுறுத்தி 4 பேரும் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சி யர் பிரதீப்குமார், வருவாய்த் துறை அதிகாரிகள், அதிகாரிகள் முகாமுக்கு சென்று சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த ஆட்சியர் உண்ணாநிலை போராட்டம் நடத்தப்படவில்லை என்றார்.