tamilnadu

img

வாய்ப்பு வாசல்

அரசு போக்குவரத்துக் கழகத்தில் 3,274 பணிகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்க ளை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. மண்டல வாரியான காலியிடங்கள் :  அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் - 318 சென்னை மாநகரப் போக்கு வரத்துக் கழகம் - 364 விழுப்புரம் மண்டலம் - 322 கும்பகோணம் மண்டலம் - 756 சேலம் மண்டலம் - 486 கோவை மண்டலம் - 344 மதுரை மண்டலம் - 322 திருநெல்வேலி மண்டலம் - 362 கல்வித்தகுதி :  மண்டல வாரியான காலிப்பணி யிடங்கள் என்று மொத்தம் 3 ஆயி ரத்து 274 இடங்களை நிரப்பப் போகி றார்கள். கல்வித் தகுதியைப் பொறுத்த வரையில், குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவ சியமாகும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று, குறைந்த பட்சம் 18 மாதங்கள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் சாலைப் போக்குவரத்து மையத்தில் (ஐஆர்டி) பயிற்சி பெற்றவர்களுக்கு பணி அனுபவம் தேவையில்லை. நடத்துநர் பணிக்கான சான்றிதழ், முதலுதவி பயிற்சிக்கான சான்றிதழ் ஆகியவை தேவை.  வயது வரம்பு :  விண்ணப்பிப்பதற்கு குறைந்த பட்சம் 24 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் என்றால் அதிகபட்ச வயது 40 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் ராணுவத்தினரில் பொதுப் பிரிவினர் என்றால் அதிகபட்ச வயது 50 என்றும், பிற்பட்ட, எஸ்.சி.  எஸ்.டி பிரிவினருக்கு 55 என்றும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. உடற்தகுதி :  விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 160 செ.மீ. உயரமாக இருக்க வேண்டும். உடல் எடை குறைந்தபட்சம் 50 ஆகவும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கான நல்ல உடல்நிலையுடன் இருக்க வேண்டும். தேர்வு முறை :  எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் ஓட்டுநர் திறன் தேர்வு ஆகியவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் நடத்தப்படும். இவற்றின் அடிப்படையில் தேர்ச்சி நடக்கும். பொது அறிவு வினாக்கள், தமிழ் மொழித் திறனறிவு வினாக்கள் மற்றும் ஓட்டுநர் பணி தொடர்பான வினாக்கள் ஆகியவை எழுத்துத் தேர்வில் இடம் பெறும். விண்ணப்பிக்க... இந்த பணி நிரப்புதல் தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் விண் ணப்பிப்பதற்கான இணைப்பு ஆகிய வற்றிற்கு www.arasubus.tn.gov.in  என்ற இணையதளத்தைப் பார்வை யிடலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி :  ஏப்ரல் 21, 2025

கவுரவ விரிவுரையாளர்கள்

தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் கவுரவ விரிவுரையா ளர்கள் பணிக்கான அறிவிக்கை வெளி யாகியிருக்கிறது. இந்தப்பணிக்கு ரூ.25,000 ஊதி யம் வழங்கப்படும். காலியிடங்கள் உள்ள பாடப்பிரிவுகளில் குறைந்த பட்சம் 55 விழுக்காடு மதிப்பெண்களு டன் முதுநிலைப் பட்டம் பெற்றதோடு, UGC-NET அல்லது CSIR-NET தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் உள்ளன :

 1.தமிழ்,

2. ஆங்கிலம்,

3. பொருளி யல்,

4. கணிதம்,

5. இயற்பியல்,

6. வேதி யியல்,

7. உயிர் வேதியியல்,

8. உயிர் தொ ழில்நுட்பம்

, 9. விலங்கியல்,

10. நுண்ணு யிரியல்,

11. கணினி அறிவியல்,

12. வணிகவியல்,

13. சுற்றுச்சூழல் அறிவி யல்,

14. மேலாண்மைப் படிப்பு,

15. நூலக அறிவியல்.

நெட் மற்றும் ஆய்வுப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள், பணியாற்றிய அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.  இது குறித்த கூடுதல் விபரங்களு க்கு www.tvu.edu.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம். அறி விக்கையும், விண்ணப்பிப்பதற்கான இணைப்பும் அதில் உள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஏப்ரல் 2, 2025 ஆகும். ஆன்லை னில் விண்ணப்பித்த பிறகு விண்ணப்ப நகல் மற்றும் இணைக்கப்பட்ட சான்றி தழ் நகல்களையும் தபால் மூலமாகக் கீழ்க்கண்ட முகவரிக்கு ஏப்ரல் 7, 2025க் குள் அனுப்பி வைக்க வேண்டும். முகவரி : பதிவாளர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர் - 632115