பெரம்பலூர் உழவர் சந்தையில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா
பெரம்பலூர், மே 7 - பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வடக்கு மாதவி சாலையில் உள்ள உழவர் சந்தை தொடங்கப்பட்டதன் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, புதன்கிழமை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் உழவர் சந்தையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும், 4 விவசாயிகளுக்கு உழவர் சந்தை அடையாள அட்டை அட்டையையும், காய்கனி வாங்க வந்த 50 நுகர்வோர்களுக்கு ஒரு கிலோ காய்கனி தொகுப்பினை இலவசமாக வழங்கி னார். இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்கு நர் செ.பாபு, முன்னாள் வேளாண் வணிக துணை இயக்குநர் ம.கோவிந்தராசு, தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் எஸ்.சத்யா, வேளாண்மை துறை அலுவலர்கள், அரசு அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.