tamilnadu

img

புதுக்கோட்டையில் 200 தீக்கதிர் சந்தா வழங்கல்

புதுக்கோட்டை, ஜூலை 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் தீக்கதிர் நாளிதழுக்கு 200 சந்தாக்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் மற்றும் தீக்கதிர் பொறுப்பாளர்களுக்கான கூட்டம் புதுக்கோட்டையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், திருச்சி பதிப்பு தீக்கதிர் நிர்வாகி ஜெ.ஜெயபாலன் ஆகி யோர் பேசினர். கூட்டத்தில் 100 ஆண்டு, 60 ஆறு மாதம்  40 தினசரி என மொத்தம் 200 சந்தாவுக் கான தொகையை மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜனிடம், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமை யன், எஸ்.சங்கர், ஜி.நாகராஜன், துரை. நாராயணன், எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.