tamilnadu

தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையால் கைது

இராமேஸ்வரம், பிப்.8- இராமேஸ்வரம் மீன்பிடித் துறை முகத்தில் இருந்து  அனுமதிச் சீட்டை பெற்று திங்களன்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றனர்.  கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கே  ரோந்துப் பணிக்காக வந்த இலங்கை கடற்படையினர்  எல்லை தாண்டி மீன் பிடித்த தாகக் கூறி 16 மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளை  பறிமுதல் செய்து, அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்த தாகக்கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அறு பத்து மூன்று  மீனவர்கள் 2021- டிசம்பரில்  நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்,

மேலும் இவர்களில் 53 மீனவர்கள் சிறை யில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகும் இலங்கை அரசின் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் உள்ளனர். அதே சமயத்தில் தமிழக மீனவர்களி டம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகு களை இலங்கை அரசு ஏலத்தில்விட்டு வருகிறது. இதைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தற்போது இலங்கை கடற்படையினர் மேலும் 16 மீனவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து மூன்று விசைப்படகுகளை பறி முதல் செய்திருப்பது இராமேஸ்வரம் மீன வர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அந்நியச் செலாவணி பிரச்சனை யால் பெரும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு  இந்திய அரசு நிதி  உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.

ஆயினும் இலங்கை அரசு இந்திய மீனவர்களுக்கு எதிராகவே நடந்து  கொண்டிருக்கிறது. 16 மீனவர்கள் கைது குறித்துப் பேசிய இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர்  கே.ஜேசுதாசன்,  இலங்கைக் கடற்படை யினர் வரம்பை மீறுகிறார்கள், எங்கள் மீன வர்கள் சமீப நாட்களாக மிகவும் தயக்கத்து டன் கடலுக்குச் சென்று வருகிறார்கள். ஒன்றிய அரசும், தமிழக அரசும் இணைந்து இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும். பாக் ஜலசந்தி ஒரு சிறிய  பகுதி, தற்செயலாக, நமது மீனவர்கள்  இலங்கைக் கடற்பரப்பைக் கடக்கிறார் கள். இதை ஒரு பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசிய மில்லை. அத்துடன் கைது நடவடிக்கை கள் தேவையற்றவை. ஒன்றிய அரசு இலங்கை அரசாங்கத்திற்கு அனைத்து வழிகளிலும் ஆதரவளித்து வருகிறது. மேலும் தமிழக மீனவர்களின் பிரச்சனை களுக்கு இணக்கமான தீர்வைக் கொண்டு வருவதற்கு இராஜதந்திர ரீதியில் நட வடிக்கை மேற்கொள்ளவேண்டும்என்றார்.