சென்னை,பிப்.12- வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணை யம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடை பெறுகிறது. எனவே, 38 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள், தங்க ளுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு உள்ள வர்களும் அல்லது வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்கா ளர் அடையாள அட்டை அல்லது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யம் அனுமதித்துள்ள கீழ்க்கா ணும் 11 அடையாள ஆவணங்க ளில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம். '
ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழி லாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு. ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலை மைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, இந்திய கடவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், ஒன்றிய -மாநில அரசு, ஒன்றிய- மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங் களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப் பட்ட புகைப் படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், மக்களவை- சட்டமன்ற -சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை போன்ற வைகளாகும். எனவே, நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி சாதா ரண தேர்தல்களில் வாக்குப்பதி வின்போது ஆள் மாறாட்டங் களைத் தவிர்க்க மேற்காணும் அடையாள ஆவணங்களில் ஏதா வது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.