tamilnadu

img

அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக 10ஆவது இருதயமாற்று அறுவை சிகிச்சை

சென்னை, ஆக. 31- ஓமந்தூரர் அரசு மருத்துவமனை யில் வெற்றிகரமாக 10ஆவது இருதய மாற்று அறுவை சிகிச்சை நடை பெற்றது. சென்னை ஓமந்தூரார் அரசு  பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவ மனையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு வெற்றிகரமாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குண மடைந்து வீடு திரும்ப உள்ள நிலை யில் அவரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதனன்று (ஆக. 31) நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர் அவர்கள் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம் பழவலம்  என்ற ஊரைச் சேர்ந்த செல்வகுமார்  (38) என்பவருக்கு வெற்றிகரமாக இருதய மாற்று அறுவை சிகிச்சை  நடைபெற்றது. இவர் இந்த மருத்து வமனையில் 10ஆவது இருதயமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்.

இவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவுடன், அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு இருதய தசை மிகவும் வலுவிழந்து இருந்தது மருத்துவக் குழுவினரால் கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த 17ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 30 வயதுடையவரின் இருதயம் தான மாக பெறப்பட்டு அவருக்கு இருதய  மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. இவர் தற்போது நன்கு குணமடைந்து வீடு திரும்ப உள்ளார்.   மனித உறுப்புகளை அகற்று வதற்கும், பாதுகாக்கவும் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதை வரன்முறைப்படுத்திடவும் வியாபார நோக்கில் மனித உறுப்பு களை உபயோகிப்பதை தடுப்பதற் கும் மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைச் சட்டம், 1994இல் இயற்றப் பட்டது. தமிழகத்தில் இச்சட்டத்தின்கீழ் பதிவுரிமை பெற்றுள்ள மருத்துவமனை களில் மட்டுமே மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன.

சிறுநீரகம், இருதயம், கல்லீரல், நுரையீரல், குடல், கணையம் மற்றும்  கருவிழி போன்ற பல்வேறு மனித  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக ளுக்கு தமிழ்நாட்டில் தற்பொழுது 194 மருத்துவமனைகள் இச்சட்டத்தின்கீழ் பதிவுரிமை பெற்றுள்ளன. இதில் 21 அரசு மருத்துவமனைகளிலும், 174 தனியார் மருத்துவமனைகளிலும் மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. கோவையில் கடந்த ஜூலை 31ஆம் தேதி நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகளில் இருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களுக்கும் மூளைச்சாவு அடையும் நபர்களிடமிருந்து விரைவாக உடல் உறுப்புகளை எடுக்க ஏதுவாக  உடல் உறுப்பு எடுக்கும் மையங்க ளாக செயல்பட அனுமதி வழங்கப்பட  உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளி களின் காத்திருப்போர் எண்ணிக்கை யினை குறைக்க முடியும். மூளை இறப்பு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தினை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது இவ்வாறு அவர் கூறினார். இதில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் மருத்து வர் சம்சத் பேகம், மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் விமலா, நோடல் அலுவலர் டாக்டர் ஆனந்த குமார், நிலைய மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.