செங்கல்பட்டு, ஜூன். 29- செங்கல்பட்டில் நடை பெறவிருக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க 105 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4 ஆவது மாநில மாநாடு செப்டம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெறவுள்ளது.
இலச்சினை வெளியீடு
இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ப.சு.பாரதி அண்ணா தலைமையில் புதனன்று (ஜூன் 29) நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.வெள்ளிக்கண்ணன், மாவட்டச் செயலாளர் எஸ்.தாட்சாயினி, பொருளாளர் எப்.அருள்ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாநிலக்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன் வர வேற்றார். 4ஆவது மாநில மாநாட்டின் இலச்சினையை ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை யின் அகில இந்திய தலைவர் ஆர்.முரளி வெளியிட்டு பேசினார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன்,
மாநிலச் செயலாளர் பி.ஜீவா, மாநிலப் பொருளாளர் ஆர்.சக்கரவர்த்தி, மாநிலத் துணை செயலாளர்கள் கே.பி.பாபு, என்.சாந்தி, மாரியப்பன். சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எ.ஆறுமுக நயினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், மாவட்டச் செயலா ளர்கள் கே.வாசுதேவன் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), கே.சேஷாத்திரி (சிஐடியு), ஜி.மோகனன் (விவசாயி கள் சங்கம்), பி.சண்முகம் (விவசா யத் தொழிலாளர்கள்). க.புருசோத்த மன் (வாலிபர்), ஜி.b ஜயந்தி( மாதர்), மு.தமிழ்பாரதி (மாணவர் சங்கம்) மற்றும் முனிச்செல்வம் (தமுஎகச), நாராயணன் (போக்கு வரத்து), எம். சீனிவாசன் (ஆசிரியர் சங்கம்), பூங்குழலி (அரசு ஊழியர் சங்கம்).சிபிஎம் மூத்த தலைவர் ஆர்.ராஜ லட்சுமி, செயலாளர்கள் எஸ்.ராஜா, எஸ்.குணசேகரன், கே.வேலன், எம்.செல்வம், எம்.குமார், ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வரவேற்புக் குழுத் தலைவராக ப.சு.பாரதிஅண்ணா, செயலாளராக இ.சங்கர், பொருளாளராக வி.அரி கிருஷ்ணன் ஆகியோர் உள்ளடக்கிய 105 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது எனவும் மாநாட்டிற்கு விரிவான ஏற்பாடுகளை செய்வது என்றும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.