tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாளை கும்பகோணம், பாபநாசத்தில் ‘மக்களுடன் முதல்வர் முகாம்’

தஞ்சாவூர், ஜூன் 18 -  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் மற்றும் கும்பகோணம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளில் ஜூன் 20 அன்று மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது.  பாபநாசம், கும்பகோணம் வட்டாரங்களில் ஜூன் 20 அன்று சருக்கை தென்சருக்கை சமுதாயக் கூடத்திலும், உம்பளபாடி காவேரி (மேட்டுத் தெரு), அரசலாறு தலைப்பு (நீர்வளத்துறை) வளாகத்திலும், கோவிந்தநாட்டுச்சேரி புத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்திலும்,  ரெகுநாதபுரம் ஸ்ரீசன் மஹாலிலும், திருவலஞ்சுழி வெண் ணிலா திருமண மண்டபத்திலும், திருநல்லூர் மகாலெட்சுமி திருமண மண்டபத்திலும், உத்தமதானி ஊராட்சி ஒன்றிய  தொடக்கப் பள்ளியிலும், திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய  தொடக்கப் பள்ளியிலும், உள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளி யிலும், வலையப்பேட்டை சமுதாயக் கூடத்திலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்த முகாம்கள் காலை 10 முதல் மாலை 5.30 மணி  வரை நடைபெறவுள்ளது. முகாமில் பொதுமக்கள் கலந்து  கொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களு டன் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட முகாம் நடைபெறும் இடங்களில், இரண்டு  நாட்களுக்கு முன்பாகவே பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று  முகாம் நாளன்று அம்மனுக்களை இணையவழியில் பதிவு செய்து தீர்வு காணப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட  ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.  

தஞ்சாவூரில் நாளை தனியார்  வேலைவாய்ப்பு முகாம்

 தஞ்சாவூர், ஜூன் 18-  தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக, வேலை தேடும் இளை ஞர்களுக்காக சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலு வலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.  அதன்படி ஜூன் 20 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி யளவில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப் பட உள்ளது. இதில், தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்  துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிக மான காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு  செய்ய உள்ளனர்.  இம்முகாமானது, தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த  வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு  வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். மேலும், வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இம்முகா மில் கலந்து கொள்பவர்கள் www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.  தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளு மாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.  

நாளை அரசுக் கல்லூரிகளில் 2 ஆம் கட்ட கலந்தாய்வு

கும்பகோணம்/அறந்தாங்கி, ஜூன் 18 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக்  கல்லூரியில் இந்த ஆண்டுக்கான இளநிலை பட்ட வகுப்பிற் கான மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடை பெறுகிறது.  இதுகுறித்து கல்லூரி முதல்வர் அ.மாதவி வெளியிட்ட அறிக்கையில், “இளநிலை பட்ட வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை, காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட  கலந்தாய்வு ஜூன் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.  இக்கல்லூரியில் 16 துறைகளில் இளநிலை பட்ட வகுப்பு கள் நடைபெறுகின்றன. சுழற்சி 1 இல் பி.ஏ. பாடப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், இந்தியப் பண்பாடு மற்றும்  சுற்றுலாவியல், வரலாறு பாடப்பிரிவுகளும், பி.காம், பி.பி.ஏ.  பாடப்பிரிவுகளும் பி.எஸ்சி பாடப்பிரிவில் கணிதம், இயற்பி யல், வேதியியல், விலங்கியல், புவியியல், தாவரவியல், புள்ளியியல், கணினி பயன்பாட்டியல், கணினி அறிவியல் போன்ற பாடப் பிரிவுகளும், கழற்சி 2 இல் பி.ஏ. பாடப்பிரி வில் ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ. பி.எஸ்சி பாடப்பிரிவில் கணி தம், கணினி பயன்பாட்டியல், கணினி அறிவியல், இயற்பி யல், வேதியியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கும் நடை பெறுகிறது.  ஏற்கனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களும், புதிதாக விண்ணப்பித்தவர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார். அறந்தாங்கி  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலை அடுத்த பெருநாவலூரில் செயல்படும் அறந்தாங்கி அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி  ஆண்டிற்கான இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 20.6.2025 அன்று கல்லூரி வளாகத்தில் நடை பெறுகிறது என்று கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை அறிவித்துள்ளார். www.tngasa என்ற இணையதளத்தில் 7.5.2025 முதல் இன்றைய தேதி வரை விண்ணப்பித்த மாண வர்களும், விண்ணப்பிக்காத மாணவர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.