புதுக்கோட்டை, ஜூன்.17- கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து புதுக்கோட்டையில் மருத்து வர்கள் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவக் கல்லூரி புறநோயாளிகள் பிரிவு முன்பாக நடைபெற்ற பெற்ற தர்ணா போராட்டத்திற்கு இந்திய மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் கே.எச்.சலீம், பொருளாளர் எம்.ராஜா மற்றும் மருத்துவர்கள் ராம்தாஸ், சுப்பையா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.