tamilnadu

img

பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

பெரம்பலூர், ஏப்.21- பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சியில் கடந்த சில வாரங்களாக சரி வர குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் சனியன்று பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள குரும்பலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் அதிகாரிகள், மக்களிடம் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

;