பெரம்பலூர் சிறுமி பாலியல் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் சிறுமி பாலியல் வழக்கில் 15 ஆண்டுகள் தண்டனை பெற்ற ராஜா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை மற்றும் நீதிமன்ற விசாரணையில் முரண்பாடு உள்ளதாக கூறி, இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மலர்கொடி, அரசு வழக்கறிஞர் வினோத்குமார், தீர்ப்பளித்த நீதிபதி விஜயகாந்த் ஆகியோர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.