இந்திய மக்கள் கருத்து
புதுதில்லி, மே 6- உலகளாவிய தொற்றுநோயால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் ஒரு நாளைக்கு புதிய உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகள் 20,000 ஐ விட அதிகமாக உள்ளன. ஒரு நாளைக்கு இறப்புகள் 1,000 க்கும் அதிகமாக உள்ளன. இங்கிலாந்தில் அதிகாரப்பூர்வ கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை, 29,000-க்கும் அதிகமாக உள்ளது.
கொரோனா இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்க முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இத்தாலி உள்ளது. இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்படி, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,391 ஆக உள்ளது, 1,684 பேர் பலியாகி உள்ளனர். இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு குறித்து இப்சோஸ் என்ற நிறுவனம் சர்வே நடத்தியது. ஏப்ரல் 16 முதல் 19 வரை மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய ஆன்லைன் கணக்கெடுப்பில் 28,000 பேர் பதிலளித்து உள்ளனர்.
இதில் 51 சதவீதம் பேர் பொருளாதாரம் மற்றும் வணிகங்களைத் திறக்க விரும்புகிறார்கள். 78 சதவீதம் பேர் வேலை மற்றும் பயணத்திற்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டுமென்ற மனநிலையில் உள்ளனர். கணக்கெடுக்கப்பட்ட 14 நாடுகளில் பிரிட்டன், கனடா, மெக்ஸிகோ, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாட்டைச் சேர்ந்தவர்கள் வைரஸ் பரவுவது முற்றாக நீங்கும் வரை பொருளாதார சந்தை திறக்கப்படுவதை விரும்பவில்லை. இந்தியா, ரஷ்யா, சீனா, இத்தாலி மற்றும் ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஊரடங்கு நீட்டிப்பை விரும்பவில்லை. குறிப்பாக, இந்திய மக்கள் வைரஸ் முழுவதுமாக இருந்தால் பொருளாதார சந்தை மீண்டும் திறக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கவில்லை.