புதுதில்லி:
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், வடிவமைக்கப்பட்ட புதிய ரயில், ‘டிரெய்ன் 18’. ரூ. 97 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட - இயந்திரம் இல்லாத இந்த ரயிலை, பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்னதாக துவக்கி வைத்தார். ஆனால், 200 கி.மீ. வேகத்தில் செல்லும் என்று கூறப்பட்ட இந்த ரயில், 80 கி.மீ. வேகத்தில் செல்வதற்கே திணறிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ‘டிரெய்ன் 18’ தயாரிப்புக்கான மின்சாதனங்கள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.