tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு மற்றும் தில்லியில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. 
இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் வகையில் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த இஸ்லாமியர்கள் அல்லாத 6 மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தை திருத்து உள்ளது. நாடு முழுவதும் மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் துவங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் ஆங்காங்கே தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் தில்லியில் போராட்டத்தை தடுக்கும் வகையில் பல இடங்களில்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 14 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் செங்கோட்டை பகுதியில் பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்கும் இடங்களில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 
பெங்களூருவிலும் போராட்டத்தை தடுக்கும் வகையில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.. 
இந்நிலையில் இன்று பெங்களூருவில் மையப்பகுதியில் இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்று அறிஞர் ராமச்சந்திரகுஹா உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.