tamilnadu

img

தன்னலமின்றி பணியாற்றுபவர்களுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

கொரோனா அச்சுறுத்தலை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இன்று மாலை பொதுமக்கள் கைதட்டி நன்றி தெரிவித்தனர். 
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. சுமார் 370 பேர் கெரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று வரை 7 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் என பல தரப்பினரும் தன்னலமின்றி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 5 மணியளவில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பொது மக்கள்  கை தட்டினர். தமிழகத்திலும் பல பகுதிகளில் மக்கள் கைகளை தட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.