tamilnadu

img

மாசுக் கட்டுப்பாட்டு சோதனை கெடுபிடிகளால் திணறும் வாகன உரிமையாளர்கள்!

புதுதில்லி:
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, மாசுக் கட்டுப்பாட்டுச் சோதனைக்கு அனுப்பப்படும் வாகனங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித் துள்ளதாக கூறப்படுகிறது.புதுதில்லியில் மொத்தம் 938 மாசுக் கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் மட்டும், மொத்தம் 1 லட்சத்து 28 ஆயிரம் வாகனங்கள் சோதனைக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.முன்பு, மாசுக் கட்டுப் பாட்டு விதிமீறலுக்கான அபராதம் ரூ. 1000 என்றே இருந்தது. முதல்முறை ஆயிரம் ரூபாயும், அடுத்தடுத்த முறைகளில் 2000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.ஆனால், புதிய சட்டத்தின்படி இனிமேல் மாசுக் கட்டுப் பாட்டை மீறும் வாகனங்கள் எடுத்த எடுப்பிலேயே ரூ. 10 ஆயிரம் அபராதம் செலுத்தியாக வேண்டும். இதனால், வாகன உரிமையாளர்கள் வாகனங்களை இயக்கவே அஞ்சுகிறார்கள். எந்த வகையிலாவது அபராதம் வசூலித்து விட வேண் டும் என்று, மோடி அரசு தீவிரமாக இருப்பதால், தங்களின்வாகனங்களை மாசுக் கட்டுப்பாட்டு மையங்களில் நிறுத்திவிட்டு காத்துக் கிடக் கின்றனர். இது ஒருபுறமிருக்க, பரிசோதனை முடிவுகளை வழங்குவதில், சர்வர் பிரச்சனை காரணமாக, மாசுக்கட்டுப்பாட்டு மையங்கள் தாமதம் ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.