இம்ரான் கானை மிரட்டும் அத்வாலே
சண்டிகர், செப்.14- பிரதமர் மோடி அதிரடியான வர் என்பதால், ஆக்கிரமிப்பு காஷ் மீரை இந்தியாவிடம் ஒப்படைப் பதுதான் பாகிஸ்தானுக்கு நல் லது என்று, இந்திய குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித் தல் துறை இணையமைச்சரு மான ராம்தாஸ் அத்வாலே கூறி யுள்ளார். அம்பேத்கரிய வழியில் அரசி யல் வாழ்க்கையைத் துவங்கிய ராம்தாஸ் அத்வாலே, தற்போது சங்-பரிவாரின் ஊதுகுழலாகவே மாறிவிட்டார். இந்நிலையில், சண்டிகரில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில்தான், போர்க்கூச்சல் போட்டுள்ளார். “ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்ப டைக்க வேண்டும். அதுவே பாகிஸ் தானுக்கு நல்லது. போர் வேண் டாம் என்றால், பாகிஸ்தான் நாட் டின் மீது உண்மையிலேயே அக் கறை இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் இம் ரான் கான் ஒப்படைக்க வேண்டும். ஏனென்றால், பிரதமர் மோடி அதி ரடியானவர்” என்று அத்வாலே கூறியுள்ளார். மோடி ஆட்சியில் இந்தியா வின் சிறு-குறு, நடுத்தரத் தொழில் கள் மட்டுமன்றி, பெருந்தொழில் களே முதுகெலும்பு ஒடிந்து கிடக்கின்றன. கடந்த 45 ஆண்டு களில் இல்லாத அளவிற்கு வேலையின்மையும், வறுமையும் தாண்டவமாடுகிறது. இந்நிலையில், “ஆக்கிர மிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைத்தால், அங்கு ஏராள மான தொழில் நிறுவனங்களை நாங்கள் நிறுவுவோம்” என்றும் “இதன் மூலம் பாகிஸ்தானுடன் வர்த்தகம் மேற்கொண்டு அந்த நாட்டின் வறுமை மற்றும் வேலை யில்லா திண்டாட்டத்துக்கும் உத வுவோம்” என்றும் அத்வாலே காமெடி செய்துள்ளார்.