tamilnadu

நேரடியாக மதவெறியைத் தூண்டிவிட்ட மோடி!

வார்தா, ஏப். 5-

தேர்தல் வெற்றிக்காக அனைத்து விதமான முறைகேடுகளிலும் பிரதமர் மோடி இறங்கி விட்டார்.புல்வாமாவில் பலியான சிஆர்பிஎப் வீரர்கள், பாலகோட்டில் தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்கள் ஆகியோரின் தியாகத்தைக் கூட விட்டுவைக்காத அவர், ராணுவ வீரர்களின் புகைப்படங் களை பொதுக்கூட்ட மேடையிலேயே போட்டு, பகிரங்கமாகவே பாஜக-வுக்கு வாக்கு சேகரித்தார். செயற்கைக் கோளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைச் சோதனையை, பாஜக முன் னின்று நடத்தியது போல தோற்றத்தை ஏற்படுத்த முயன்றார். தற்போது, பகிரங்கமாகவே மதவெறியைத் தூண்டும் வேலையில் இறங்கியுள்ளார்.மகாராஷ்டிர மாநிலம் வார்தா கூட்டத்தில் பேசிய மோடி, ‘இந்து’ என்றவார்த்தையை மட்டும் 13 முறை பயன் படுத்தியுள்ளார். “இந்துக்கள் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக வரலாற்றில் எங்காவது ஆதாரம் உள்ளதா?”என்று கேட்டுவிட்டு, “5000 ஆண்டு இந்துக்களின் பாரம்பரியத்தை காங்கிரஸ் களங்கப்படுத்தி விட்டது” என்றும்வெறியுணர்ச்சியைத் தூண்டி விட்டுள்ளார்.

;