சென்னை,ஆக.6- ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்து சிதைத்துள்ள மத்திய பாஜக அரசின் நடவடிக்கையால் காஷ்மீர் மாணவர்கள் வெளிமாநிலங்களில் தவிக்கின்றனர். ‘காஷ்மீரை விட்டு வெளியில் வர சிறப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், காஷ்மீரைச் சேர்ந்த வர்களான நாங்கள் மீண்டும் எங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப எந்தவித சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை’ என்று வெளிமாநிலங்களில் படிக்கும் ஜம்மு - காஷ்மீர் மாநில மாணவர்கள் ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.