தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக்கட்டண உயர்வை கண்டித்து 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட சில மாணவர்களை குறி வைத்து அபராதம் விதிக்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் 3 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். மாணவர்களை பேரணியை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.