புதுதில்லி, நவ.11- தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திவரும் போரா ட்டத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. கல்விக் கட் டண உயர்வு, ஆடைக் கட்டுப் பாடு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 15 நாட் களுக்கும் மேலாக பல்கலைக் கழக மாணவர்கள் போராட்ட த்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், திங்க ளன்று பல்கலைக் கழக வளாகம் முன்பு திரண்ட ஏராளமான மாண வர்கள், போலீசார் வைத்திருந்த தடுப்பு வேலிகளை தாண்டிச் செல்ல முயற்சித்தனர். இத னால் போலீசாருக்கும் மாணவர் களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தங்களது கோரிக்கைகளுக்கு பல்கலைக் கழக நிர்வாகம் செவிசாய்க்க வேண்டும் என மாணவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.