ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் சொல்கிறார்
புதுதில்லி, ஆக. 19 - தில்லி ஜே.என்.யு. பல்கலைக் கழகத்திற்கு மோடியின் பெய ரைச் சூட்ட வேண்டும் என்றும், ஜவஹர்லால் நேருவின் பெயர் இனியும் நீடிக்க வேண்டியதில்லை என்றும் பாஜக எம்.பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபி, கடந்த 17-ஆம் தேதி தில்லி ஜேஎன்யு பல்கலைக் கழக வளாகத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது. இதில், தில்லி வட மேற்குத் தொகுதி பாஜக எம்.பி.யும் பாடகருமான ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் கலந்துகொண்டு உரை யாற்றியுள்ளார். அப்போதுதான், ஜே.என்.யு.-விலுள்ள ‘ஜே’ இனி எதற்காக? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “மோடி தேச நலன் களுக்காக பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். ஆகவே ‘ஜே.என்.யு.- (JNU)’-வை ‘எம்.என்.யு.’ பல்கலைக்கழகமாக மாற்ற வேண் டும் என்று நான் பரிந்துரைக்கி றேன். அதாவது, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் என்பதை மோடி நரேந்திர பல்கலைக் கழ கம் (MNU – Modi Narendra University) என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். ஏனெனில் பிரத மர் மோடி பெயரில் இங்கு ஏதாவது இருக்க வேண்டும்.” என்று கூறி யுள்ளார். முன்னாள் பிரதமர் ஜவ கர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு, 1969-ஆம் ஆண்டு, தில்லி யில் ஜவஹர்லால் நேரு பல்க லைக் கழகம் (ஜேஎன்யு) நிறுவப் பட்டது குறிப்பிடத்தக்கது.