tamilnadu

img

தலைக்கவசம்... தலையாய கவசம்

2018 : சாலை விபத்துகளில் 43,600 மரணங்கள்

நாடு முழுவதும் கடந்த 2018-ம் ஆண்டு, சாலை விபத்துகளில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டிகளில், 43 ஆயிரத்து 600 பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த எண்ணிக்கையானது 2017-ம் ஆண்டை விட 21 விழுக்காடு அதிகம். அதே போல் 2018-ல் தலைக்கவசம் அணியாததால் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் 15 ஆயிரத்து 360 பேர் பலியாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள இந்த  புள்ளி விவரங்கள் மூலம், தலைக்கவசம் அணிவதன் அவசியம் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விதியி லிருந்து குஜராத் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் விலக்கு அளித்துள் ளன. குஜராத்தில் தலைக்கவசம் அணி யாத வாகன ஓட்டிகளில் 958 பேரும், பின்னால் அமர்ந்து பயணித்தவர்களில் 560 பேரும்  கடந்த ஆண்டு நடந்த விபத்து களில் பலியாகியுள்ளனர். ஜார்க்கண்டில் வாகன ஓட்டிகள் 790பேரும், பின்னால் அமர்ந்துபயணித்தவர்கள் 450 பேரும் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளனர்.

இந்த பட்டியலில் 6,020 உயிரிழப்பு களுடன் உத்தரப்பிரதேசம் முதலிடமும், 5,232 உயிரிழப்புகளுடன் மகாராஷ்டிர மாநிலம் 2-வது இடமும் பிடித்துள்ளது. தமிழகத்தில் 548 இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாததால் கடந்த ஆண்டில் உயிரிழந்துள்ளனர். அதே போல் சீட்பெல்ட் அணியாமல் கார்களில் பயணித்த 24,400 பேர் பலியாகியிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.