tamilnadu

img

தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக நேரடி நடவடிக்கை

செப்.30 தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் 

சென்னை, செப். 25- தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் பட்டியலின மக்கள் மீது மனித  நாகரிகம் வெட்கிப்போகும் அள விற்கு சாதிய பாரபட்சங்கள் தொடர் கின்றன. சத்துணவுக் கூடங்கள்முதல் மயானம் வரை தீண்டாமைக் கொடு மைகள் நீள்கின்றன.  இத்தகைய தீண்டாமைக் கொடு மைகளுக்கு முடிவுகட்டும் நேரடிக் களப்போராட்டங்களை செப்டம்பர் 30, தோழர். பி.சீனிவாசராவ் நினைவு  தினத்தில் தீண்டாமை ஒழிப்பு முன் னணி நடத்தி வருகிறது. அவ்வாறே வரும் செப்டம்பர் 30 அன்று பின் வரும்  போராட்டங்கள் தமிழகத்தில் நடை பெறவிருக்கிறது என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு,  மாநில பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் ஆகியோர் தெரிவித்துள்ள னர். இதுகுறித்து அவர்கள் விடுத்தி ருக்கும் அறிக்கை வருமாறு:-

ஆலய நுழைவு

விருதுநகர் மாவட்டம், விருது நகர் ஒன்றியம் பாவாலி கிராமத்தி லுள்ள  பட்டியலின மக்கள் கன்னிமாரி யம்மன் காமாட்சி கோவிலில்நுழை யும் போராட்டம் நடைபெறும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு,மாவட்டத் தலை வர் எம்.சி.பாண்டியன், மாவட்டச் செய லாளர் எம்.முத்துக்குமார், சிபிஎம்  மாவட்டச் செயலாளர் கே. அர்ஜூணன் ஆகியோர்  போராட்டத்திற்கு தலைமை ஏற்கிறார்கள்.

பஞ்சமி நில மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் ஊராட்சி, கடம்பன் குட்டை கிராமத்தில்  புல எண்  236/245 ல் 10 ஏக்கர் பஞ்சமி  நிலம் பழங்குடி இருளர் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது தனி நபர் அபகரிப்பில் உள்ளது. இந்த பஞ்சமி நிலத்தை மீட்டு பழங்குடி மக்க ளுக்கு வழங்கும் நிலமீட்புப் போராட் டம் நடைபெறவுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன், மாநில துணைப் பொதுச்  செயலாளர் பி.செல்வன், மாவட்டத் தலைவர் எம்.ரவி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் ஆகி யோர் தலைமை ஏற்கிறார்கள்.

நிழற்குடை பாகுபாடு

புதுக்கோட்டை மாவட்டம் கூத் தாண்டவர் கோயில் ஒன்றியம், தெம்மா வூர் கிராமத்தில் தலித் மக்கள் பேருந்து  நிழற்குடையில் சமமாக அமர்வதை  சகிக்காத சாதியவாதிகள் தொடர்ந்து  மேல் கூரையையும், இருக்கைகளை யும்  அகற்றிவருகின்றனர். மேற்கூரை யும், இருக்கையும் அமைத்து, அம ரும் போராட்டம் நடைபெறவுள்ளது. மாநில துணைப் பொதுச் செயலா ளர்கள் சின்னை. பாண்டியன், மு.கந்த சாமி, மாவட்டத் தலைவர் எம்.உடை யப்பன், மாவட்டச் செயலாளர் அன்பு  மணவாளன், சிபிஎம் மாவட்டச் செய லாளர் கவிவர்மன் ஆகியோர் தலைமை ஏற்கிறார்கள்.

குடிமனைப் பட்டா 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்க லம் நகர் தோப்பூரில் பல்லாண்டுக ளாக குடியிருந்து வரும் 184 தலித்  குடும்பங்களுக்கு பட்டா வழங்கும்  வரை காத்திருக்கும் போராட்டம் நடை பெறவுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்டத் தலை வர் ஆர்.அண்ணாதுரை, மாவட்டச் செயலாளர் பி.பி.பழனிசாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ரகுராமன் ஆகியோர் தலைமை ஏற்கிறார்கள்.

 நிலமீட்பு

தருமபுரி வட்டம், உங்கரான அல்லி  கிராமத்தில் 2011-ல் பட்டியலின மக்க ளுக்கு புல எண் 65 ல் 2. 59 ஏக்கர்  நிலம் ஆதிதிராவிட நலத் துறையால்  78 பயனாளிகளுக்கு வழங்க கைய கப்படுத்தப்பட்டது. ஆனால் அளந்து  கொடுக்கப்படாமல் தனிநபர் ஆக்கிர மிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி தலித் பயனாளிகளுக்கு வழங்கும் நேரடிப் போராட்டம் நடை பெறவுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு,தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டத் தலைவர் டி.எஸ்.ராமச் சந்திரன், மாவட்டச் செயலாளர் டி. மாதையன் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஏ.குமார் ஆகியோர் தலைமை ஏற்கிறார்கள். இந்த சமூக உரிமைப் போராட் டங்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.