tamilnadu

img

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுதில்லி,நவ.8- ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம் பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறை யில் உள்ளார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தில்லி உயர்நீதிமன்றத் தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனு மீதான விசாரணையில் வாதங் கள் முடிந்தன.இதையடுத்து ஜாமீன் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

;