புதுதில்லி:
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை, ‘திருடர்’ என்று குறிப்பிடும் சுவரொட்டிகள் தில்லியின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருப்பது, அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சுவரொட்டிகளில், கெஜ்ரிவால் சிறைச் சீருடையில், கையில் பணப்பையுடன் இருப்பது போல படம் இடம்பெற்றுள்ளது. மேலும், அதில் “தன்னை நேர்மையானவர் எனக் கூறியவரே பெரிய திருடனாக மாறிவிட்டார்” என இந்தியில் எழுதப்பட்டுள்ளது.